பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
நெறிந்த கருங்குழல் மடவாய்!* நின் அடியேன் விண்ணப்பம்*
செறிந்த மணி முடிச் சனகன்* சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-
அறிந்து அரசு களைகட்ட* அருந்தவத்தோன் இடை விலங்கச்*
செறிந்த சிலைகொடு தவத்தைச்* சிதைத்ததும் ஓர் அடையாளம்* (2)
அல்லியம்பூ மலர்க்கோதாய்!* அடிபணிந்தேன் விண்ணப்பம்*
சொல்லுகேன் கேட்டருளாய்* துணைமலர்க் கண் மடமானே!*
எல்லியம் போது இனிதிருத்தல்* இருந்தது ஓர் இட வகையில்*
மல்லிகை மா மாலைகொண்டு* அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்*
கலக்கிய மா மனத்தனளாய்க்* கைகேசி வரம் வேண்ட*
மலக்கிய மா மனத்தனனாய்* மன்னவனும் மறாது ஒழியக்*
குலக்குமரா! காடு உறையப் போ என்று* விடை கொடுப்ப*
இலக்குமணன் தன்னொடும்* அங்கு ஏகியது ஓர் அடையாளம்*
வார் அணிந்த முலை மடவாய்!* வைதேவீ! விண்ணப்பம்*
தேர் அணிந்த அயோத்தியர்கோன்* பெருந்தேவீ! கேட்டருளாய்*
கூர் அணிந்த வேல் வலவன்* குகனோடும் கங்கைதன்னிற்*
சீர் அணிந்த தோழமை* கொண்டதும் ஓர் அடையாளம்*
மான் அமரும் மென்நோக்கி!* வைதேவீ! விண்ணப்பம்*
கான் அமரும் கல்-அதர் போய்க்* காடு உறைந்த காலத்துத்*
தேன் அமரும் பொழிற் சாரல்* சித்திரகூடத்து இருப்பப்*
பால்மொழியாய்! பரதநம்பி* பணிந்ததும் ஓர் அடையாளம*
சித்திரகூடத்து இருப்பச்* சிறுகாக்கை முலை தீண்ட*
அத்திரமே கொண்டு எறிய* அனைத்து உலகும் திரிந்து ஓடி*
வித்தகனே! இராமாவோ!* நின் அபயம் என்று அழைப்ப*
அத்திரமே அதன்கண்ணை* அறுத்ததும் ஓர் அடையாளம்*
மின் ஒத்த நுண்- இடையாய்!* மெய்- அடியேன் விண்ணப்பம்*
பொன் ஒத்த மான் ஒன்று* புகுந்து இனிது விளையாட*
நின் அன்பின் வழிநின்று* சிலை பிடித்து எம்பிரான் ஏகப்*
பின்னே அங்கு இலக்குமணன்* பிரிந்ததும் ஓர் அடையாளம்*
மைத் தகு மா மலர்க்குழலாய்!* வைதேவீ விண்ணப்பம்*
ஒத்த புகழ் வானரக்கோன்* உடன் இருந்து நினைத் தேட*
அத்தகு சீர் அயோத்தியர்கோன்* அடையாளம் இவை மொழிந்தான்*
இத் தகையால் அடையாளம்* ஈது அவன் கைம் மோதிரமே*
திக்கு நிறை புகழாளன்* தீ வேள்விச் சென்ற நாள்*
மிக்க பெரும் சபை நடுவே* வில் இறுத்தான் மோதிரம் கண்டு*
ஒக்குமால் அடையாளம்* அனுமான்! என்று* உச்சிமேல்-
வைத்துக்கொண்டு உகந்தனளால்* மலர்க்குழலாள் சீதையுமே (2)
வார் ஆரும் முலை மடவாள்* வைதேவி தனைக் கண்டு*
சீர் ஆரும் திறல் அனுமன்* தெரிந்து உரைத்த அடையாளம்*
பார் ஆரும் புகழ்ப் புதுவைப்* பட்டர்பிரான் பாடல் வல்லார்*
ஏர் ஆரும் வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே* (2)
திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்* தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து*
இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*
பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்* தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ*
அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! (2)
வென்றிமிகு நரகன்உரம்அது, அழிய விசிறும்* விறல்ஆழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று*
குன்றுகொடு குரைகடலைக், கடைந்து அமுதம்அளிக்கும்* குருமணி என்ஆர்அமுதம், குலவிஉறை கோயில்*
என்றும்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்* ஏழ்இசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்*
அன்றுஉலகம் படைத்தவனை, அனையவர்கள் நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
உம்பரும் இவ்ஏழ்உலகும், ஏழ்கடலும் எல்லாம்* உண்டபிரான் அண்டர்கள், முன்கண்டு மகிழ்வுஎய்தக்*
கும்பம்மிகு மதயானை, மருப்புஒசித்து* கஞ்சன் குஞ்சிபிடித்துஅடித்த பிரான் கோயில்*
மருங்குஎங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்ட* பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண்மடவார், மகிழ்வுஎய்தும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!
ஓடாத ஆள்அரியின், உருவம்அது கொண்டு* அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி*
வாடாத வள்உகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு* அருள்செய்தான் வாழும்இடம், மல்லிகைசெங்கழுநீர்*
சேடுஏறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை* செண்பகங்கள் மணம்நாறும், வண்பொழிலின்ஊடே*
ஆடுஏறு வயல்ஆலைப், புகைகமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!
கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்* களவுஇல்மிகு சிறுகுறள்ஆய், மூவடிஎன்று இரந்திட்டு*
அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளும்எல்லாம்* அளந்தபிரான் அமரும்இடம், வளங்கொள்பொழில்அயலே*
அண்டம்உறு முழவுஒலியும், வண்டுஇனங்கள்ஒலியும்* அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்*
அண்டம்உறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா* இலங்கை மன்னன் முடிஒருபதும் தோள்இருபதும் போய்உதிரத்*
தாள்நெடுந்திண் சிலைவளைத்த, தயரதன்சேய்* என்தன் தனிச்சரண் வானவர்க்குஅரசு, கருதும்இடம் தடம்ஆர்*
சேண்இடம்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள்வாளை* செந்நெலொடும் அடுத்துஅரிய உதிர்ந்த செழுமுத்தம்*
வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாரும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்* தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்*
காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்* கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*
நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்* ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை* காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்*
குன்றுஅதனால் மழைதடுத்து, குடம்ஆடு கூத்தன்* குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*
துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்* தூமறையோர் தொக்குஈண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை*
அன்றுஅலர்வாய் மதுஉண்டு, அங்கு அளிமுரலும் நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
வஞ்சனையால் வந்தவள்தன், உயிர்உண்டு* வாய்த்த தயிர்உண்டு வெண்ணெய்அமுதுஉண்டு*
வலிமிக்க கஞ்சன் உயிர்அதுஉண்டு, இவ் உலகுஉண்ட காளை* கருதும்இடம் காவிரிசந்து, அகில்கனகம்உந்தி*
மஞ்சுஉலவு பொழிலூடும், வயலூடும் வந்து* வளம்கொடுப்ப மாமறையோர், மாமலர்கள் தூவி*
அஞ்சலித்து அங்கு அரிசரண்என்று, இறைஞ்சும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து* பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்*
அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்* அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*
கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்* கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்*
ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்* உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு* சங்கொடு சக்கரம்வில்,*
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்* தண்டு கொண்டு புள் ஊர்ந்து,* உலகில்
வன்மை உடைய அரக்கர்* அசுரரை மாளப் படைபொருத,*
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற* நான் ஓர் குறைவு இலனே. (2)
குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி* தன் கோலச் செந்தாமரைக்கண்,*
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த* ஒளி மணி வண்ணன் கண்ணன்,*
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி* அசுரரைக் காய்ந்த அம்மான்,*
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்* யான் ஒரு முட்டு இலனே.
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்* மூவுலகுக்கு உரிய,*
கட்டியை தேனை அமுதை* நன்பாலை கனியை கரும்பு தன்னை,*
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி* அவன் திறத்துப்
பட்ட பின்னை* இறையாகிலும்* யான் என் மனத்துப் பரிவு இலனே.
',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'* என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த*
திரிபுரம் செற்றவனும் மகனும்* பின்னும் அங்கியும் போர் தொலைய,*
பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை* ஆயனை பொன் சக்கரத்து
அரியினை,* அச்சுதனைப் பற்றி* யான் இறையேனும் இடர் இலனே.
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்* எல்லா உலகும் கழிய,*
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்* உடன் ஏற திண்தேர்கடவி,*
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்* வைதிகன் பிள்ளைகளை,*
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி* ஒன்றும் துயர் இலனே.
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி* நின்ற வண்ணம் நிற்கவே,*
துயரில் மலியும் மனிசர் பிறவியில்* தோன்றி கண் காணவந்து,*
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்* புக உய்க்கும் அம்மான்,*
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற* யான் ஓர் துன்பம் இலனே.
துன்பமும் இன்பமும் ஆகிய* செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,*
இன்பம் இல் வெம் நரகு ஆகி* இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்
மன் பல் உயிர்களும் ஆகி* பலபல மாய மயக்குக்களால்,*
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று* ஏதும் அல்லல் இலனே.
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்* அழகு அமர் சூழ் ஒளியன்,*
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்* ஆகியும் நிற்கும் அம்மான்,*
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு* எல்லாக் கருமங்களும் செய்,*
எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி* யான் ஓர் துக்கம் இலனே.
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி* துழாய் அலங்கல் பெருமான்,*
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து* வேண்டும் உருவு கொண்டு,*
நக்க பிரானோடு அயன் முதலாக* எல்லாரும் எவையும்,* தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று* ஒன்றும் தளர்வு இலனே.
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த* தனிமுதல் ஞானம் ஒன்றாய்,*
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்* அருவு ஆகி நிற்கும்,*
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை* பூதங்கள் ஐந்தை இருசுடரை,*
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி* யான் என்றும் கேடு இலனே.
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,* அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண* நலனிடை ஊர்தி பண்ணி,*
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்* ஒரு நாயகமே. (2)