- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
அனைவர்க்கும் அந்தராத்தபூதனான ஸ்ரீக்ருஷ்ணனைப் பற்றின நான் ஒரு அழிவையுமுடையேனல்லேனென்கிறார். “தளர்வின்றியே யென்று மெங்கும் பரந்த” என்றது எம்பெருமானுக்கு விசேஷணம். எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்தும் தன்னுடைய நியாமகத்வசக்திக்குத் தளர்த்தியில்லாது பூர்த்தியோடே வியாபித்திருக்குமவன் என்றபடி. “தனிமுதல் ஞானமொன்றாய்” என்றது - ஸகலப்ரபஞ்சஸ்ருட்டிக்கும் வேறொருகருவி வேண்டாதபடி ஸங்கல்ப்ரூப ஜ்ஞானமொன்றையே அத்விதீய ஸாதனமாகவுடையவன் என்றபடி. தனிமுதல் என்பதையும் எம்பெருமானுக்கே அடைமொழியாக்குதலுமுண்டு. செவி வாய் கண் மூக்குடலென்னும் ஐம்புலன்கள் அற்பவிஷயங்களை க்ரஹிக்கவல்லவையேயன்றி, அபரிச்சிந்ந விஷயமான எம்பெருமானை க்ரஹிக்க முடியாதவன். உழக்காலே கடலை முகக்கவொண்ணாதாப்போலே ஐம்புலன்களால் அறியவொண்ணாதபடி அவற்றுக்கு அவ்விஷயமாயிருப்பவன் என்கிறது இரண்டாமடியால், அளவுடையைம்புலன்களென்றது- அளவுபட்ட விஷயங்களை கிரஹிக்கவே ஏற்பட்ட பஞ்சேந்திரியங்களென்றபடி.
English Translation
The first-cause Lord of effulgent knowledge, pervader of all, stands as a formless being unknown to the five senses. He is the radiant Krishna, effulgent icon, the orbs and the elements, I have attained him, and overcome my pall.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்