திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்
திருத்தேவனார்த் தொகை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று
அமைவிடம்
நாடு : இந்தியா
மாநிலம் : தமிழ்நாடு
மாவட்டம் : நாகப்பட்டினம்
அமைவு : கீழ்ச்சாலை,
திருநாங்கூருக்கு அருகில்,
தாயார் : ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
மூலவர் : தெய்வநாயகன்
உட்சவர்: மாதவப் பெருமாள்
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: மாதவ பெருமாள்,,மாதவ நாயகி