திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்
தல புராணம்: இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது. திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. அகோபில மடம்: இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.
அமைவிடம்
ஊர் : அகோபிலம்
மாவட்டம்: கர்னூல்
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
நாடு : இந்தியா,
தாயார் : ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி
மூலவர் : ப்ரஹலாதவரதன்
உட்சவர்: --
மண்டலம் : வட நாடு
இடம் : ஆந்திரம்
கடவுளர்கள்: ப்ரஹலாதவரதன் ,ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி