2 எண்ணிக்கை பாடல் பாட
உயர்வு அற உயர் நலம்* உடையவன் எவன் அவன்*
மயர்வு அற மதி நலம்* அருளினன் எவன் அவன்*
அயர்வு அறும் அமரர்கள்* அதிபதி எவன் அவன்*
துயர் அறு சுடர் அடி* தொழுது எழு என் மனனே! (2)
கர விசும்பு எரி வளி* நீர் நிலம் இவைமிசை*
வரன் நவில் திறல் வலி* அளி பொறை ஆய்நின்ற*
பரன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிரல் நிறை ஆயிரத்து* இவை பத்தும் வீடே. (2)
வீடுமின் முற்றவும்* வீடு செய்து* உம் உயிர்
வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)
சேர்த்தடத்* தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*
சீர்த் தொடை ஆயிரத்து* ஓர்த்த இப்பத்தே. (2)
பத்து உடை அடியவர்க்கு எளியவன்;* பிறர்களுக்கு அரிய
வித்தகன்* மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
மத்து உறு கடை வெண்ணெய்* களவினில் உரவிடை யாப்புண்டு*
எத்திறம், உரலினோடு* இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)
வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை* அருவினையேன்-
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட* கள்வா! என்பன்; பின்னையும்*
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்* வல் ஆன் ஆயர் தலைவனாய்*
இள ஏறு ஏழும் தழுவிய* எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.
மாலே மாயப் பெருமானே!* மா மாயவனே! என்று என்று*
மாலே ஏறி மால் அருளால்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
பால் ஏய் தமிழர் இசைகாரர்* பத்தர் பரவும் ஆயிரத்தின்-
பாலே பட்ட இவை பத்தும்* வல்லார்க்கு இல்லை பரிவதே.
பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)
மாதவன்பால் சடகோபன்* தீது அவம் இன்றி உரைத்த*
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து* ஓத வல்லார் பிறவாரே.
பிறவித்துயர் அற* ஞானத்துள் நின்று.*
துறவிச் சுடர் விளக்கம்* தலைப்பெய்வார்,*
அறவனை* ஆழிப்படை அந்தணனை,*
மறவியை இன்றி* மனத்து வைப்பாரே.
குடைந்து வண்டு உண்ணும்* துழாய் முடியானை,*
அடைந்த தென் குருகூர்ச்* சடகோபன்,*
மிடைந்த சொல் தொடை* ஆயிரத்து இப்பத்து,*
உடைந்து நோய்களை* ஓடுவிக்குமே.
ஓடும் புள் ஏறி,* சூடும் தண் துழாய்,*
நீடு நின்றவை,* ஆடும் அம்மானே.
நீர்புரைவண்ணன்,* சீர்சடகோபன்,*
நேர்தல் ஆயிரத்து,* ஓர்தல்இவையே.
பொருமா நீள் படை* ஆழி சங்கத்தொடு,*
திருமா நீள் கழல்* ஏழ் உலகும் தொழ,*
ஒரு மாணிக் குறள் ஆகி,* நிமிர்ந்த,* அக்
கரு மாணிக்கம்* என் கண்ணுளது ஆகுமே.
மணியை வானவர் கண்ணனை* தன்னது ஓர்-
அணியை,* தென் குருகூர்ச் சடகோபன்,* சொல்
பணிசெய் ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
தணிவிலர் கற்பரேல்,* கல்வி வாயுமே.
வாயும் திரை உகளும்* கானல் மடநாராய்,*
ஆயும் அமர் உலகும்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
நோயும் பயலைமையும்* மீது ஊர எம்மேபோல்,*
நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.
சோராத எப் பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,*
ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,*
ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவை பத்தும்,*
சோரார் விடார் கண்டீர்* வைகுந்தம் திண்ணனவே.
திண்ணன் வீடு* முதல் முழுதும் ஆய்,*
எண்ணின் மீதியன்* எம் பெருமான்,*
மண்ணும் விண்ணும் எல்லாம்* உடன் உண்ட,* நம்
கண்ணன் கண் அல்லது* இல்லை ஓர் கண்ணே.
ஏத்த ஏழ் உலகும் கொண்ட* கோலக்
கூத்தனைக்,* குருகூர்ச் சடகோபன் சொல்,*
வாய்த்த ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
ஏத்த வல்லவர்க்கு* இல்லை ஓர் ஊனமே.
குழாம் கொள் பேர் அரக்கன்* குலம் வீய முனிந்தவனை,*
குழாம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த,*
குழாம் கொள் ஆயிரத்துள்* இவை பத்தும் உடன் பாடி,*
குழாங்களாய் அடியீர் உடன்* கூடிநின்று ஆடுமினே.
ஆடி ஆடி* அகம் கரைந்து,* இசை
பாடிப் பாடிக்* கண்ணீர் மல்கி,* எங்கும்
நாடி நாடி* நரசிங்கா என்று,*
வாடி வாடும்* இவ் வாள் நுதலே.
வாட்டம் இல் புகழ்* வாமனனை* இசை
கூட்டி* வண் சடகோபன் சொல்,* அமை
பாட்டு* ஓர் ஆயிரத்து இப் பத்தால்,* அடி
சூட்டலாகும்* அம் தாமமே.
அம் தாமத்து அன்பு செய்து* என் ஆவி சேர் அம்மானுக்கு,*
அம் தாமம் வாழ் முடி சங்கு* ஆழி நூல் ஆரம் உள,*
செந்தாமரைத்தடம் கண்* செங்கனி வாய் செங்கமலம்,*
செந்தாமரை அடிகள்* செம்பொன் திரு உடம்பே.
கூறுதல் ஒன்று ஆராக்* குடக் கூத்த அம்மானைக்,*
கூறுதலே மேவிக்* குருகூர்ச் சடகோபன்,*
கூறின அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
கூறுதல் வல்லார் உளரேல்* கூடுவர் வைகுந்தமே.
வைகுந்தா மணிவண்ணனே* என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,*
வைகும் வைகல் தோறும்* அமுது ஆய வான் ஏறே,
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய் குந்தா* உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..
கண்ணித் தண் அம் துழாய் முடிக்* கமலத் தடம் பெருங் கண்ணனைப்,* புகழ்
நண்ணி தென் குருகூர்ச்* சடகோபன் மாறன் சொன்ன,*
எண்ணில் சோர்வு இல் அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,*
பண்ணில் பாட வல்லார்* அவர் கேசவன் தமரே.
கேசவன் தமர்* கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,*
மா சதிர் இது பெற்று* நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்* விண்ணோர்
நாயகன்,* எம் பிரான் எம்மான்* நாராயணனாலே.
பற்பநாபன் உயர்வு அற உயரும்* பெரும் திறலோன்,*
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு* எனக்கே தன்னைத் தந்த
கற்பகம்,* என் அமுதம் கார் முகில் போலும்* வேங்கட நல்
வெற்பன்,* விசும்போர் பிரான்* எந்தை தாமோதரனே.
வண்ண மா மணிச் சோதியை* அமரர் தலைமகனை,*
கண்ணனை நெடுமாலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
பண்ணிய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,*
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு* அண்ணல் தாள் அணைவிக்குமே.
அணைவது அரவு அணைமேல்* பூம்பாவை ஆகம்
புணர்வது,* இருவர் அவர் முதலும் தானே,*
இணைவன்* ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,*
புணைவன்* பிறவிக்கடல் நீந்துவார்க்கே.
எங்கும் உளன் கண்ணன் என்ற* மகனைக் காய்ந்து,*
இங்கு இல்லையால் என்று* இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப் பிரான் பெருமை* ஆராயும் சீர்மைத்தே?
கண் தலங்கள் செய்ய* கரு மேனி அம்மானை,*
வண்டு அலம்பும் சோலை* வழுதி வள நாடன்,*
பண் தலையில் சொன்ன தமிழ்* ஆயிரத்து இப் பத்தும் வலார்,*
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்* எம் மா வீடே.
எம்மாவீட்டுத்* திறமும் செப்பம்,* நின்
செம்மா பாடபற்புத்* தலைசேர்த்து ஒல்லை,-
கைம்மா துன்பம்* கடிந்த பிரானே,*
அம்மா அடியேன்* வேண்டுவது ஈதே.
விடல் இல் சக்கரத்து* அண்ணலை மேவல்*
விடல் இல் வண் குருகூர்ச்* சடகோபன்,*
கெடல் இல் ஆயிரத்துள்* இவை பத்தும்,*
கெடல் இல் வீடு செய்யும்* கிளர்வார்க்கே.
பொருள் என்று இவ் உலகம்* படைத்தவன் புகழ்மேல்,*
மருள் இல் வண் குருகூர்* வண் சடகோபன்,*
தெருள் கொள்ளச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்து,*
அருளுடையவன் தாள்* அணைவிக்கும் முடித்தே.
முடிச்சோதியாய்* உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,*
அடிச்சோதி நீநின்ற* தாமரையாய் அலர்ந்ததுவோ,*
படிச்சோதி ஆடையொடும்* பல் கலனாய்,* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ?* திருமாலே! கட்டுரையே. (2)
வியப்பாய வியப்புஇல்லா* மெய்ஞ் ஞான வேதியனைச்,*
சயப்புகழார் பலர் வாழும்* தடம் குருகூர்ச் சடகோபன்,*
துயக்கு இன்றித் தொழுது உரைத்த* ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்* ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)
முந்நீர் ஞாலம் படைத்த* எம் முகில் வண்ணனே,*
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*
வெம் நாள் நோய் வீய* வினைகளை வேர் அறப் பாய்ந்து,*
எந் நாள் யான் உன்னை* இனி வந்து கூடுவனே? (2)
உயிர்கள் எல்லா* உலகமும் உடையவனைக்,*
குயில் கொள் சோலைத்* தென் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசை மாலை* ஆயிரத்துள் இப் பத்தும்,*
உயிரின்மேல் ஆக்கை* ஊனிடை ஒழிவிக்குமே. (2)
ஒழிவு இல் காலம் எல்லாம்* உடனாய் மன்னி,*
வழு இலா* அடிமை செய்யவேண்டும் நாம்,*
தெழி குரல் அருவித்* திருவேங்கடத்து,*
எழில் கொள் சோதி* எந்தை தந்தை தந்தைக்கே. (2)
குன்றம் ஏந்திக்* குளிர் மழை காத்தவன்,*
அன்று ஞாலம்* அளந்த பிரான்,* பரன்
சென்று சேர்* திருவேங்கட மா மலை,*
ஒன்றுமே தொழ* நம் வினை ஓயுமே. (2)
தாள் பரப்பி* மண் தாவிய ஈசனை,*
நீள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொல்,*
கேழ் இல் ஆயிரத்து* இப் பத்தும் வல்லவர்*
வாழ்வர் வாழ்வு எய்தி* ஞாலம் புகழவே. (2)
புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,*
திகழும் தண் பரவை என்கோ!* தீ என்கோ! வாயு என்கோ,*
நிகழும் ஆகாசம் என்கோ!* நீள் சுடர் இரண்டும் என்கோ,*
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ* கண்ணனைக் கூவும் ஆறே!
கூடி வண்டு அறையும் தண் தார்க்* கொண்டல் போல் வண்ணன் தன்னை*
மாடு அலர் பொழில்* குருகூர் வண் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவையும் ஓர் பத்தும் வல்லார்,*
வீடு இல போகம் எய்தி* விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)
மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை* முதலைச் சிறைப்பட்டு நின்ற,*
கைம்மாவுக்கு அருள் செய்த* கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,*
எம்மானைச் சொல்லிப் பாடி* எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,*
தம்மாம் கருமம் என் சொல்லீர்* தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)
தீர்ந்த அடியவர் தம்மைத்* திருத்திப் பணிகொள்ளவல்ல,*
ஆர்ந்த புகழ் அச்சுதனை* அமரர் பிரானை எம்மானை,*
வாய்ந்த வளவயல்சூழ்* தண் வளங் குருகூர்ச்சடகோபன்,*
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து* அருவினை நீறு செய்யுமே. (2)
செய்ய தாமரைக் கண்ணன் ஆய்* உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,*
வையம் வானம் மனிசர் தெய்வம்* மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*
செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்* வெளிப் பட்டு இவை படைத்தான்* பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான்* ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)
கண்கள் காண்டற்கு அரியன் ஆய்* கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,*
மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்* வானவர் ஈசனை,*
பண்கொள் சோலை வழுதி நாடன்* குருகைக்கோன் சடகோபன் சொல்,*
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை* பங்கயக் கண்ணனை,*
பயில இனிய* நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,*
பயிலும் திரு உடையார்* எவரேலும் அவர் கண்டீர்,*
பயிலும் பிறப்பிடை தோறு* எம்மை ஆளும் பரமரே. (2)
அடி ஓங்கு நூற்றுவர் வீய* அன்று ஐவர்க்கு அருள்செய்த-
நெடியோனைத்,* தென் குருகூர்ச் சடகோபன்* குற்றேவல்கள்,*
அடி ஆர்ந்த ஆயிரத்துள்* இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு,* ஆரக் கற்கிற்கில்* சன்மம் செய்யாமை முடியுமே. (2)
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்* சீர்
அடியானே,* ஆழ் கடலைக் கடைந்தாய்!* புள் ஊர்
கொடியானே,* கொண்டல் வண்ணா!* அண்டத்து உம்பரில்
நெடியானே!,* என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)
சொன்னால் விரோதம் இது* ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,*
என் நாவில் இன்கவி* யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*
தென்னா தெனா என்று* வண்டு முரல் திருவேங்கடத்து,*
என் ஆனை என் அப்பன்* எம் பெருமான் உளனாகவே.
ஏற்கும் பெரும்புகழ்* வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,*
ஏற்கும் பெரும்புகழ்* வண் குருகூர்ச் சடகோபன் சொல்,*
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,*
ஏற்கும் பெரும்புகழ்* சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு* சங்கொடு சக்கரம்வில்,*
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்* தண்டு கொண்டு புள் ஊர்ந்து,* உலகில்
வன்மை உடைய அரக்கர்* அசுரரை மாளப் படைபொருத,*
நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற* நான் ஓர் குறைவு இலனே. (2)
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பாடல் ஓர் ஆயிரத்துள்* இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,* அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண* நலனிடை ஊர்தி பண்ணி,*
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்* ஒரு நாயகமே. (2)
ஒரு நாயகமாய்* ஓட உலகு உடன் ஆண்டவர்,*
கரு நாய் கவர்ந்த காலர்* சிதைகிய பானையர்,*
பெரு நாடு காண* இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,*
திருநாரணன் தாள்* காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.
அஃதே உய்யப் புகும் ஆறு என்று* கண்ணன் கழல்கள் மேல்,*
கொய் பூம் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,*
செய் கோலத்து ஆயிரம்* சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,*
அஃகாமல் கற்பவர்* ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.
பாலன் ஆய்* ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,*
ஆல் இலை* அன்னவசம் செய்யும் அண்ணலார்,*
தாள் இணைமேல் அணி* தண் அம் துழாய் என்றே
மாலுமால்,* வல்வினையேன்* மட வல்லியே. (2)
மெலியும் நோய் தீர்க்கும்* நம் கண்ணன் கழல்கள்மேல்,*
மலி புகழ் வண் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
ஒலி புகழ் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்*
மலி புகழ் வானவர்க்கு ஆவர்* நல் கோவையே. (2)
கோவை வாயாள் பொருட்டு* ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,* மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்!* குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,*
பூவை வீயா நீர் தூவிப்* போதால் வணங்கேனேலும்,* நின்
பூவை வீயாம் மேனிக்குப்* பூசும் சாந்து என் நெஞ்சமே.
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி* கண்ணன் ஒண் கழல்கள் மேல்*
செய்ய தாமரைப் பழனத்* தென்னன் குருகூர்ச் சடகோபன்,*
பொய் இல் பாடல் ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்,*
வையம் மன்னி வீற்றிருந்து* விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)
மண்ணை இருந்து துழாவி* 'வாமனன் மண் இது' என்னும்,*
விண்ணைத் தொழுது அவன் மேவு* வைகுந்தம் என்று கை காட்டும்,*
கண்ணை உள்நீர் மல்க நின்று* 'கடல்வண்ணன்' என்னும் அன்னே!* என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு* என் செய்கேன் பெய் வளையீரே? (2)
வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,*
சொல் வினையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இவை பத்தும்,*
நல் வினை என்று கற்பார்கள்* நலனிடை வைகுந்தம் நண்ணி,*
தொல்வினை தர எல்லாரும்* தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)
வீற்றிருந்து ஏழ் உலகும்* தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,*
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை* வெம் மா பிளந்தான் தன்னை,*
போற்றி என்றே கைகள் ஆரத்* தொழுது சொல் மாலைகள்,*
ஏற்ற நோற்றேற்கு* இனி என்ன குறை எழுமையுமே? (2)
மாரி மாறாத தண் அம் மலை* வேங்கடத்து அண்ணலை,*
வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்* குருகூர் நகர்க்,*
காரி மாறன் சடகோபன்* சொல் ஆயிரத்து இப் பத்தால்,*
வேரி மாறாத பூமேல் இருப்பாள்* வினை தீர்க்குமே.
தீர்ப்பாரை யாம் இனி* எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்* உற்ற நல் நோய் இது தேறினோம்,*
போர்ப்பாகு தான் செய்து* அன்று ஐவரை வெல்வித்த,* மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு* இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு* ஆட்செய்து நோய் தீர்ந்த*
வழுவாத தொல்புகழ் வண் குருகூர்ச் சடகோபன்,* சொல்
வழுவாத ஆயிரத்துள்* இவை பத்து வெறிகளும்,*
தொழுது ஆடிப் பாடவல்லார்* துக்க சீலம் இலர்களே.
சீலம் இல்லாச் சிறியனேலும்* செய்வினையோ பெரிதால்,*
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி* 'நாராயணா! என்று என்று,*
காலந்தோறும் யான் இருந்து* கைதலைபூசல் இட்டால்*
கோல மேனி காண வாராய்* கூவியும் கொள்ளாயே.
தழுவிநின்ற காதல் தன்னால்* தாமரைக் கண்ணன் தன்னை,*
குழுவு மாடத் தென் குருகூர்* மாறன் சடகோபன்,* சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
தழுவப் பாடி ஆட வல்லார்* வைகுந்தம் ஏறுவரே.
ஏறு ஆளும் இறையோனும்* திசைமுகனும் திருமகளும்,*
கூறு ஆளும் தனி உடம்பன்* குலம் குலமா அசுரர்களை,*
நீறு ஆகும்படியாக* நிருமித்து படை தொட்ட,*
மாறாளன் கவராத* மணி மாமை குறைவு இலமே. (2)
உயிரினால் குறைவு இல்லா* உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,*
தயிர் வெண்ணெய் உண்டானைத்,* தடம் குருகூர்ச் சடகோபன்,*
செயிர் இல் சொல் இசைமாலை* ஆயிரத்துள் இப்பத்தால்*
வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2)
நண்ணாதார் முறுவலிப்ப* நல் உற்றார் கரைந்து ஏங்க,*
எண் ஆராத் துயர் விளைக்கும்* இவை என்ன உலகு இயற்கை?,*
கண்ணாளா! கடல் கடைந்தாய்!* உன கழற்கே வரும் பரிசு,*
தண்ணாவாது அடியேனைப்* பணி கண்டாய் சாமாறே. (2)
திருவடியை நாரணனை* கேசவனை பரஞ்சுடரை,*
திருவடி சேர்வது கருதி* செழுங் குருகூர்ச் சடகோபன்,*
திருவடிமேல் உரைத்த தமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்,*
திருவடியே அடைவிக்கும்* திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்* யாதும் இல்லா
அன்று,* நான்முகன் தன்னொடு* தேவர் உலகோடு உயிர் படைத்தான்,*
குன்றம்போல் மணிமாடம் நீடு* திருக்குருகூர் அதனுள்,*
நின்ற ஆதிப்பிரான் நிற்க* மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)
இலிங்கத்து இட்ட புராணத்தீரும்* சமணரும் சாக்கியரும்*
வலிந்து வாது செய்வீர்களும்* மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்*
மலிந்து செந்நெல் கவரி வீசும்* திருக்குருகூர் அதனுள்,*
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்* ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்* வண் குருகூர்நகரான்*
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்* மாறன் சடகோபன்,*
வேட்கையால் சொன்ன பாடல்* ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,*
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்* மற்றது கையதுவே. (2)
கை ஆர் சக்கரத்து* என் கருமாணிக்கமே! என்று என்று,*
பொய்யே கைம்மைசொல்லி* புறமே புறமே ஆடி.*
மெய்யே பெற்றொழிந்தேன்,* விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!* அறையோ இனிப்போனாலே. (2)
கார்வண்ணன் கண்ண பிரான்* கமலத்தடங்கண்ணன் தன்னை,*
ஏர்வள ஒண்கழனிக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்*
ஆர்வண்ணத்தால் உரைப்பார்* அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.
பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல் உயிர்ச் சாபம்*
நலியும் நரகமும் நைந்த* நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*
கலியும் கெடும் கண்டுகொண்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*
மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம்*. (2)
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே* தன்அடியார்க்கு அருள்செய்யும்*
மலியும் சுடர் ஒளி மூர்த்தி* மாயப் பிரான் கண்ணன் தன்னை*
கலிவயல் தென் நன் குருகூர்க்* காரிமாறன் சடகோபன்*
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து* உள்ளத்தை மாசு அறுக்குமே*.
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக்குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே*
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?*
இரைக்கும் கருங் கடல் வண்ணன்* கண்ண பிரான் தன்னை*
விரைக் கொள் பொழில்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
நிரைக் கொள் அந்தாதி* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரைக்க வல்லார்க்கு* வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்* (2)
ஊர் எல்லாம் துஞ்சி* உலகு எல்லாம் நள் இருள் ஆய்*
நீர் எல்லாம் தேறி* ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்*
பார் எல்லாம் உண்ட* நம் பாம்பு அணையான் வாரானால்*
ஆர் எல்லே! வல்வினையேன்* ஆவி காப்பார் இனியே?* (2)
உறங்குவான் போல்* யோகுசெய்த பெருமானை*
சிறந்த பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன் சொல்*
நிறம் கிளர்ந்த அந்தாதி* ஆயிரத்துள் இப்பத்தால்*
இறந்து போய் வைகுந்தம்* சேராவாறு எங்ஙனேயோ?*
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!* என்னை முனிவது நீர்?*
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்*
செங்கனி வாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. (2)
அறிவு அரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நன் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன்மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்டவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்* கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்* குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை*
வாய்ந்த வழுதி வள நாடன்* மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து*
ஆய்ந்த தமிழ் மாலை* ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்* உலகில்-
ஏந்து பெரும் செல்வத்தராய்த்* திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்* ஆகிலும் இனி உன்னை விட்டு*
ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்* அரவின் அணை அம்மானே*
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்* சிரீவரமங்கல நகர்*
வீற்றிருந்த எந்தாய்!* உனக்கு மிகை அல்லேன் அங்கே*.
ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!* என்றும் என்னை ஆளுடை*
வான நாயகனே!* மணி மாணிக்கச்சுடரே*
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்* கைதொழ உறை*
வானமாமலையே!* அடியேன் தொழ வந்தருளே*. (2)
தெய்வ நாயகன் நாரணன்* திரிவிக்கிரமன் அடி இணைமிசை*
கொய் கொள் பூம் பொழில் சூழ்* குருகூர்ச் சடகோபன்*
செய்த ஆயிரத்துள் இவை* தண் சிரீவரமங்கை மேய பத்துடன்*
வைகல் பாட வல்லார்* வானோர்க்கு ஆரா அமுதே*. (2)
ஆரா அமுதே! அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்* செழு நீர்த் திருக்குடந்தை*
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!* (2)
வாரா அருவாய் வரும் என் மாயா!* மாயா மூர்த்தியாய்*
ஆரா அமுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!* திருக்குடந்தை-
ஊராய்!* உனக்கு ஆள் பட்டும்* அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு* அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)
மான் ஏய் நோக்கு நல்லீர்!* வைகலும் வினையேன் மெலிய*
வான் ஆர் வண் கமுகும்* மது மல்லிகை கமழும்*
தேன் ஆர் சோலைகள் சூழ்* திருவல்லவாழ் உறையும்-
கோனாரை* அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)
நாமங்கள் ஆயிரம் உடைய* நம் பெருமான் அடிமேல்*
சேமம் கொள் தென் குருகூர்ச்* சடகோபன் தெரிந்து உரைத்த*
நாமங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் திருவல்லவாழ்*
சேமம் கொள் தென் நகர்மேல்* செப்புவார் சிறந்தார் பிறந்தே*
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்* பெரிய பாரதம் கைசெய்து* ஐவர்க்குத்-
திறங்கள் காட்டியிட்டுச்* செய்து போன மாயங்களும்*
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை* நின்று நின்று உருக்கி உண்கின்ற* இச்-
சிறந்தவான் சுடரே!* உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)
நாகு அணைமிசை நம் பிரான்* சரணே சரண் நமக்கு என்று* நாள்தொறும்-
ஏக சிந்தையனாய்க்* குருகூர்ச் சடகோபன் மாறன்*
ஆக நூற்ற அந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்*
மாக வைகுந்தத்து* மகிழ்வு எய்துவர் வைகலுமே*.
வைகல் பூங் கழிவாய்* வந்து மேயும் குருகினங்காள்*
செய் கொள் செந்நெல் உயர்* திருவண்வண்டூர் உறையும்*
கை கொள் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
கைகள் கூப்பி சொல்லீர்* வினையாட்டியேன் காதன்மையே*. (2)
மின்இடை மடவார்கள் நின்அருள் சூடுவார்* முன்பு நான் அது அஞ்சுவன்*
மன்உடை இலங்கை* அரண் காய்ந்த மாயவனே*
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்* இனி அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும்* தந்து போகு நம்பீ!*. (2)
ஆய்ச்சி ஆகிய அன்னையால்* அன்று வெண்ணெய் வார்த்தையுள்* சீற்ற முண்டு அழு-
கூத்த அப்பன் தன்னை* குருகூர்ச் சடகோபன்*
ஏத்திய தமிழ் மாலை* ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்*
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு* இல்லை நல்குரவே*. (2)
நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமும் ஆய்*
வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமும் ஆய்*
பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்குகுடித்* திருவிண்ணகர்க் கண்டேனே*. (2)
நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமும் ஆய்*
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்* நிலன் ஆய் விசும்பு ஆய்*
சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை* யாவர்க்கும் புண்ணியமே*.
என் அப்பன் எனக்கு ஆய்* இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்*
பொன் அப்பன் மணி அப்பன்* முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*
மின்னப் பொன் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்*
தன் ஒப்பார் இல் அப்பன்* தந்தனன் தன தாள் நிழலே*. (2)
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்* குன்றம் ஒன்று ஏந்தியதும்*
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்* உட்பட மற்றும் பல*
அரவில் பள்ளிப் பிரான்தன்* மாய வினைகளையே அலற்றி,*
இரவும் நன் பகலும் தவிர்கிலன்* என்ன குறை எனக்கே?
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் ஆய்* முழு ஏழ் உலகும்,* தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து* அவை ஆய் அவை அல்லனும் ஆம்,*
கேசவன் அடி இணைமிசைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
தூய ஆயிரத்து இப்பத்தால்* பத்தர் ஆவர் துவள் இன்றியே.
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு* தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்!* உமக்கு ஆசை இல்லை விடுமினோ,*
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்* தாமரைத் தடம் கண் என்றும்,*
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க* நின்று நின்று குமுறுமே.
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்* தேவ பிரானையே,*
தந்தை தாய் என்று அடைந்த* வண் குருகூரவர் சடகோபன்,*
முந்தை ஆயிரத்துள் இவை* தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,*
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்* அடிமைசெய்வார் திருமாலுக்கே
மாலுக்கு* வையம் அளந்த மணாளற்கு,*
நீலக் கருநிற* மேக நியாயற்கு,*
கோலச் செந்தாமரைக்* கண்ணற்கு,*
என் கொங்குஅலர்ஏலக் குழலி* இழந்தது சங்கே.
கட்டு எழில் சோலை* நல் வேங்கடவாணனைக்,*
கட்டு எழில் தென் குருகூர்ச்* சடகோபன் சொல்,*
கட்டு எழில் ஆயிரத்து* இப்பத்தும் வல்லவர்,*
கட்டு எழில் வானவர்* போகம் உண்பாரே.
உண்ணும் சோறு பருகும்நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்,* எம்பெருமான் என்று என்றே* கண்கள் நீர்மல்கி,*
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே.
ஊரும் நாடும் உலகமும்* தன்னைப்போல் அவனுடைய*
பேரும் தார்களுமே பிதற்ற* கற்பு வான் இடறி,*
சேரும் நல் வளம்சேர்* பழனத் திருக்கோளூர்க்கே,*
போரும் கொல் உரையீர்* கொடியேன் கொடி பூவைகளே!
வைத்த மா நிதியாம்* மதுசூதனையே அலற்றி,*
கொத்து அலர் பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
பத்து நூற்றுள் இப்பத்து* அவன்சேர் திருக்கோளூர்க்கே,*
சித்தம் வைத்து உரைப்பார்* திகழ் பொன் உலகு ஆள்வாரே.
பொன் உலகு ஆளீரோ?* புவனி முழுது ஆளீரோ?,*
நல் நலப் புள்ளினங்காள்!* வினையாட்டியேன் நான் இரந்தேன்,*
முன் உலகங்கள் எல்லாம் படைத்த* முகில்வண்ணன் கண்ணன்,*
என் நலம் கொண்ட பிரான் தனக்கு* என் நிலைமை உரைத்தே?.
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு* மதுசூத பிரான் அடிமேல்,*
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தோற்றங்கள் ஆயிரத்துள்* இவையும் ஒருபத்தும் வல்லார்*
ஊற்றின்கண் நுண் மணல்போல்* உருகாநிற்பர் நீராயே.
நீராய் நிலனாய்* தீயாய் காலாய் நெடுவானாய்,*
சீரார் சுடர்கள் இரண்டாய்* சிவனாய் அயனானாய்,*
கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி* கொடியேன்பால்
வாராய்,* ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
தெரிதல் நினைதல்* எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,*
உரிய தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன்,*
தெரியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்*
உரிய தொண்டர் ஆக்கும்* உலகம் உண்டாற்கே.
உலகம் உண்ட பெருவாயா!* உலப்பு இல் கீர்த்தி அம்மானே,*
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!* நெடியாய் அடியேன் ஆர் உயிரே,*
திலதம் உலகுக்கு ஆய் நின்ற* திருவேங்கடத்து எம் பெருமானே,*
குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.
அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து* அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்*
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்* பழனக் குருகூர்ச் சடகோபன்,*
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்* திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,*
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து* பெரிய வானுள் நிலாவுவரே.
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி* என்னை உன் பாதபங்கயம்,*
நண்ணிலாவகையே* நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,*
எண் இலாப் பெறுமாயனே! இமையோர்கள் ஏத்தும்* உலகம் மூன்று உடை,*
அண்ணலே! அமுதே! அப்பனே!* என்னை ஆள்வானே! (2)
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்* குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,* அப்
புண்டரீகக் கொப்பூழ்ப்* புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்
தொண்டர் தொண்டர் தொண்டன்* சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,*
கண்டு பாட வல்லார்* வினை போம் கங்குலும் பகலே. (2)
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்* கண்ண நீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்,*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இரு நிலம் கை துழா இருக்கும்,*
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!* இவள் திறத்து என் செய்கின்றாயே? (2)
என் திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே! என்னும்,*
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே! என்னும்,*
அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்,*
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே. (2)
முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்* மூவுலகுஆளியே! என்னும்,*
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்* நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்* வண் திருவரங்கனே! என்னும்,*
அடிஅடையாதாள் போல்இவள் அணுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே
முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி உய்ந்தவன்* மொய்புனல் பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்* வண்பொழில்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே (2)
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி* தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,*
புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்* என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*
வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த* வேத ஒலியும் விழா ஒலியும்,*
பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும் அறா* திருப்பேரெயில் சேர்வன் நானே! (2)
ஊழிதோறுஊழி உருவும் பேரும் செய்கையும்* வேறவன் வையம் காக்கும்,*
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை* அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்* இவை திருப்பேரெயில் மேய பத்தும்,*
ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்* அவர்அடிமைத் திறத்து ஆழியாரே. (2)
ஆழிஎழ* சங்கும் வில்லும்எழ,* திசை
வாழிஎழ* தண்டும் வாளும்எழ,* அண்டம்
மோழைஎழ* முடி பாதம்எழ,* அப்பன்
ஊழிஎழ* உலகம் கொண்டவாறே (2)
குன்றம் எடுத்தபிரான்* அடியாரொடும்,*
ஒன்றிநின்ற* சடகோபன்உரைசெயல்,*
நன்றி புனைந்த* ஓர்ஆயிரத்துள் இவை*
வென்றி தரும்பத்தும்* மேவிக் கற்பார்க்கே (2)
கற்பார் இராம பிரானை அல்லால்* மற்றும் கற்பரோ?,*
புல்பா முதலா* புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*
நல்பால் அயோத்தியில் வாழும்* சராசரம் முற்றவும்,*
நல்பாலுக்கு உய்த்தனன்* நான்முக னார்பெற்ற நாட்டுளே? (2)
தெளிவுற்று வீவுஇன்றி* நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,*
தெளிவுற்ற கண்ணனைத்* தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*
தெளிவுற்ற ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்,* அவர்
தெளிவுற்ற சிந்தையர்* பாமரு மூவுலகத்துள்ளே (2)
பாமரு மூவுலகும் படைத்த* பற்ப நாபாவோ,*
பாமரு மூவுலகும் அளந்த* பற்ப பாதாவோ,*
தாமரைக் கண்ணாவோ!* தனியேன் தனிஆளாவோ,*
தாமரைக் கையாவோ!* உன்னை என்றுகொல் சேர்வதுவே? (2)
புக்க அரிஉருஆய்* அவுணன்உடல் கீண்டுஉகந்த,*
சக்கரச் செல்வன்தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
மிக்க ஓர்ஆயிரத்துள்* இவைபத்தும் வல்லார் அவரைத்,*
தொக்கு பல்லாண்டுஇசைத்து* கவரி செய்வர் ஏழையரே (2)
ஏழையர் ஆவிஉண்ணும்* இணைக் கூற்றம்கொலோ அறியேன்,*
ஆழிஅம் கண்ணபிரான்* திருக்கண்கள் கொலோ அறியேன்,*
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,*
தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே? (2)
கட்கு அரிய பிரமன் சிவன்* இந்திரன் என்று இவர்க்கும்,*
கட்கு அரிய கண்ணனைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
உட்கு உடை ஆயிரத்துள்* இவையும் ஒரு பத்தும் வல்லார்,*
உட்கு உடை வானவரோடு* உடனாய் என்றும் மாயாரே. (2)
மாயா! வாமனனே!* மதுசூதா நீ அருளாய்,*
தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்* விசும்பு ஆய் கால் ஆய்,*
தாயாய் தந்தையாய்* மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,*
நீயாய் நீ நின்றவாறு* இவை என்ன நியாயங்களே! (2)
ஆம் வண்ணம் இன்னது ஒன்று* என்று அறிவது அரிய அரியை,*
ஆம் வண்ணத்தால்* குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த*
ஆம் வண்ண ஒண் தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்,*
ஆம் வண்ணத்தால் உரைப்பார்* அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)
என்றைக்கும் என்னை* உய்யக்கொண்டு போகிய,*
அன்றைக்கு அன்று என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*
இன் தமிழ் பாடிய ஈசனை* ஆதியாய்-
நின்ற என் சோதியை,* என் சொல்லி நிற்பனோ? (2)
இங்கும் அங்கும்* திருமால் அன்றி இன்மை கண்டு,*
அங்ஙனே வண் குருகூர்ச்* சடகோபன்,*
இங்ஙனே சொன்ன* ஓர் ஆயிரத்து இப்பத்தும்,*
எங்ஙனே சொல்லினும்* இன்பம் பயக்குமே. (2)
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்* தானும் இவ் ஏழ் உலகை,*
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து* ஆள்கின்ற எங்கள் பிரான்,*
அன்புற்று அமர்ந்து உறைகின்ற* அணி பொழில் சூழ் திருவாறன்விளை,*
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து* கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)
தீர்த்தனுக்கு அற்றபின்* மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி* தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகி* செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
தீர்த்தங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்களைத்,* தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்* தம் தேவியர்க்கே. (2)
தேவிமார் ஆவார் திருமகள்பூமி* ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்*
மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி* வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்* பவளவாய் மணியே*
ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!* காணுமாறு அருளாய் (2)
பெரிய அப்பனை பிரமன் அப்பனை* உருத்திரன் அப்பனை* முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை* உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*
பெரியவண்குருகூர் வண்சடகோபன்* பேணின ஆயிரத்துள்ளும்*
உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்* உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (2)
நங்கள் வரிவளையாய் அங்காளோ* நம்முடை ஏதலர் முன்பு நாணி*
நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்* நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்* தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்*
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்* வேங்கடவாணனை வேண்டிச்சென்றே. (2)
வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்* என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்*
ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ* காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*
காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்* விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்*
ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்* எத்தனைகாலம் இளைக்கின்றேனே!
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன்* கண்டு கொள்மின்*
ஞாலம் அறியப் பழிசுமந்தேன்* நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*
நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த* நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட*
கோலவளையொடும் மாமைகொள்வான்* எத்தனைகாலமும் கூடச்சென்றே?
கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?* கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்*
பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்* பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*
மாடக்கொடிமதிள் தென்குளந்தை* வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்*
ஆடல்பறவை உயர்த்தவெல்போர்* ஆழிவலவனை ஆதரித்தே.
ஆழிவலவனை ஆதரிப்பும்* ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்*
தோழியர்காள்! நம்உடையமேதான்?* சொல்லுவதோ இங்கு அரியதுதான்*
ஊழிதோறுஊழி ஒருவனாக* நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்*
சூழல்உடைய சுடர்கொள்ஆதித்* தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.
தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்* என் சொல்அளவன்று இமையோர் தமக்கும்*
எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்* அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*
அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்* ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்*
வல்லிவளவயல்சூழ் குடந்தை* மாமலர்க்கண் வளர்கின்றமாலே.
மாலரிகேசவன் நாரணன்* சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று*
ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு* ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*
ஏலமலர் குழல் அன்னைமீர்காள்!* என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?*
காலம்பலசென்றும் காண்பதுஆணை* உங்களோடு எங்கள் இடைஇல்லையே.
இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்* பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்* ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்* அஞ்சனவெற்பும் அவைநணிய*
கடையறப்பாசங்கள் விட்டபின்னை* அன்றி அவன்அவை காண்கொடானே.
காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை* கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்*
மாண்குறள் கோலவடிவுகாட்டி* மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*
சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த* தேவபிராற்கு என் நிறைவினோடு*
நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்* என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்
என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!* யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை*
நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி* நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*
பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு* பால்மதி ஏந்தி ஓர்கோலநீல*
நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்* நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே
பாதம் அடைவதன் பாசத்தாலே* மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு*
கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்* வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*
தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்* இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்*
ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி* இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (2)
அங்கும் இங்கும்* வானவர் தானவர் யாவரும்*
எங்கும் இனையைஎன்று* உன்னைஅறியகிலாதுஅலற்றி*
அங்கம்சேரும்* பூமகள் மண்மகள் ஆய்மகள்*
சங்குசக்கரக் கையவன் என்பர்* சரணமே. (2)
உரையா வெம்நோய்தவிர* அருள் நீள்முடியானை*
வரையார்மாடம்* மன்னு குருகூர்ச் சடகோபன்*
உரையேய் சொல்தொடை* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
நிரையே வல்லார்* நீடு உலகத்துப் பிறவாரே. (2)
வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*
போர்கடா அரசர் புறக்கிட* மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (2)
தேனைநன்பாலை கன்னலைஅமுதை* திருந்துஉலகுஉண்ட அம்மானை*
வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்* மலர்மிசைப் படைத்தமாயோனை*
கோனை வண்குருகூர் வண்சடகோபன்* சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்*
வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்* பிறவிமாமாயக் கூத்தினையே. (2)
மாயக்கூத்தா!வாமனா!* வினையேன்கண்ணா! கண்கைகால்*
தூயசெய்ய மலர்களா* சோதிச்செவ்வாய் முகிழதா*
சாயல்சாமத் திருமேனி* தண்பாசடையா* தாமரைநீள்
வாசத்தடம்போல் வருவானே!* ஒருநாள் காண வாராயே.
'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை* யான்?' என்றுஎன்று*
அங்கே தாழ்ந்த சொற்களால்* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்* எல்லியும் காலையே. (2)
எல்லியும் காலையும்* தன்னை நினைந்துஎழ*
நல்ல அருள்கள்* நமக்கேதந்து அருள்செய்வான்*
அல்லிஅம் தண்ணம்துழாய்* முடிஅப்பன்ஊர்*
செல்வர்கள் வாழும்* திருக்கடித் தானமே (2)
அற்புதன் நாராயணன்* அரி வாமனன்*
நிற்பது மேவி* இருப்பது என்நெஞ்சகம்*
நல்புகழ் வேதியர்* நான்மறை நின்றுஅதிர்*
கற்பகச் சோலைத்* திருக்கடித் தானமே. (2)
சோலைத் திருக்கடித்தானத்து* உறைதிரு
மாலை* மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*
பாலோடு அமுதுஅன்ன* ஆயிரத்து இப்பத்தும்*
மேலை வைகுந்தத்து* இருத்தும் வியந்தே. (2)
இருத்தும் வியந்து என்னைத்* தன் பொன்அடிக்கீழ் என்று*
அருத்தித்து எனைத்துஓர்* பலநாள் அழைத்தேற்கு*
பொருத்தம்உடை* வாமனன்தான் புகுந்து* என்தன்
கருத்தைஉற* வீற்றிருந்தான் கண்டுகொண்டே. (2)
இருந்தான் கண்டுகொண்டு* எனதுஏழை நெஞ்சுஆளும்*
திருந்தாத ஓர்ஐவரைத்* தேய்ந்துஅறமன்னி*
பெரும்தாள் களிற்றுக்கு* அருள்செய்த பெருமான்*
தரும்தான் அருள்தான்* இனியான் அறியேனே. (2)
சுடர்ப்பாம்பணை நம்பரனை* திருமாலை*
அடிச்சேர்வகை* வண்குருகூர்ச் சடகோபன்*
முடிப்பான் சொன்னஆயிரத்து* இப்பத்தும் சன்மம்
விடத்* தேய்ந்தற நோக்கும்* தன்கண்கள் சிவந்தே (2)
கண்கள் சிவந்து பெரியவாய்* வாயும் சிவந்து கனிந்து* உள்ளே
வெண்பல் இலகு சுடர்இலகு* விலகு மகர குண்டலத்தன்*
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்* நான்கு தோளன் குனிசார்ங்கன்*
ஒண் சங்கதை வாள்ஆழியான்* ஒருவன் அடியேன் உள்ளானே. (2)
அடியேன்உள்ளான் உடல்உள்ளான்* அண்டத்துஅகத்தான் புறத்துள்ளான்*
படியேஇது என்றுஉரைக்கலாம் படியன்* அல்லன் பரம்பரன்*
கடிசேர் நாற்றத்துள்ஆலை* இன்பத் துன்பக் கழிநேர்மை*
ஒடியா இன்பப் பெருமையோன்* உணர்வில்உம்பர் ஒருவனே
உணர்வில்உம்பர் ஒருவனை* அவனது அருளால் உறற்பொருட்டு* என்
உணர்வின்உள்ளே இருத்தினேன்* அதுவும் அவனது இன்அருளே*
உணர்வும் உயிரும் உடம்பும்* மற்று உலப்பிலனவும் பழுதேயாம்*
உணர்வைப் பெறஊர்ந்துறஏறி* யானும் தானாய் ஒழிந்தானே.
யானும் தானாய் ஒழிந்தானை* யாதும் எவர்க்கும் முன்னோனை*
தானும் சிவனும் பிரமனும்ஆகிப்* பணைத்த தனிமுதலை*
தேனும் பாலும் கன்னலும்* அமுதும்ஆகித் தித்தித்து* என்
ஊனில் உயிரில் உணர்வினில்* நின்ற ஒன்றை உணர்ந்தேனே
தெருளும் மருளும் மாய்த்து* தன்திருந்து செம்பொன் கழல்அடிக்கீழ்*
அருளிஇருத்தும் அம்மானாம்* அயனாம் சிவனாம்* திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்* ஓர்ஆயிரத்துள் இப்பத்தால்*
அருளி அடிக்கீழ் இருத்தும்* நம்அண்ணல் கருமாணிக்கமே (2)
கருமாணிக்க மலைமேல்* மணித்தடம் தாமரைக் காடுகள்போல்*
திருமார்வு வாய்கண்கை* உந்திகால்உடை ஆடைகள் செய்யபிரான்*
திருமால் எம்மான் செழுநீர்வயல்* குட்டநாட்டுத் திருப்புலியூர்*
அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்* அன்னைமீர்! இதற்கு என்செய்கேனோ. (2)
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்* நாயகன் தன்அடிமை*
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன் சொல்*
நேர்பட்ட தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார்* அவர் நேர்பட்டார்* நெடுமாற்கு அடிமை செய்யவே. (2)
நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்* அவனைக் கருத வஞ்சித்து*
தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்* முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்*
கொடுமாவினையேன் அவன்அடியார் அடியே* கூடும் இதுஅல்லால்*
விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!* வியன் மூவுலகு பெறினுமே?. (2)
நல்ல கோட்பாட்டு உலகங்கள்* மூன்றினுள்ளும் தான்நிறைந்த*
அல்லிக் கமலக் கண்ணனை* அம்தண் குருகூர்ச் சடகோபன்*
சொல்லப் பட்ட ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*
நல்ல பதத்தால் மனைவாழ்வர்* கொண்ட பெண்டீர் மக்களே. (2)
கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்* சுற்றத்தவர் பிறரும்*
கண்டதோடு பட்டதுஅல்லால்* காதல்மற்றுயாதும்இல்லை*
எண்திசையும் கீழும்மேலும்* முற்றவும் உண்டபிரான்*
தொண்டரோமாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர் துணையே (2)
ஆதும்இல்லை மற்றுஅவனில்* என்றுஅதுவே துணிந்து*
தாதுசேர்தோள் கண்ணனைக்* குருகூர்ச்சடகோபன்சொன்ன*
தீதுஇலாத ஒண்தமிழ்கள்* இவைஆயிரத்துள் இப்பத்தும்*
ஓதவல்லபிராக்கள்* நம்மை ஆளுடையார்கள் பண்டே. (2)
பண்டைநாளாலே நின்திருஅருளும்* பங்கயத்தாள் திருஅருளும்
கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்* குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து* உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த* திருப்புளிங்குடிக் கிடந்தானே! (2)
'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று* குரைகடல் கடைந்தவன் தன்னை*
மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்* வழுதிநாடன் சடகோபன்*
நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்* இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்*
ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்* அடிஇணை உள்ளத்துஓர்வாரே (2)
ஓராயிரமாய்* உலகுஏழ்அளிக்கும்*
பேராயிரம்கொண்டதுஓர்* பீடுஉடையன்*
காராயின* காளநல்மேனியினன்*
நாரயணன்* நங்கள்பிரான்அவனே. (2)
ஆகம்சேர்* நரசிங்கம்அதுஆகி ஓர்*
ஆகம்வள்உகிரால்* பிளந்தான்உறை*
மாகவைகுந்தம்* காண்பதற்கு என்மனம்*
ஏகம்எண்ணும்* இராப்பகல்இன்றியே (2)
சீலம்எல்லைஇலான்* அடிமேல்* அணி
கோலம்நீள்* குருகூர்ச்சடகோபன்* சொல்
மாலைஆயிரத்துள்* இவை பத்தினின்
பாலர்* வைகுந்தம்ஏறுதல் பான்மையே (2)
மையார்கருங்கண்ணி* கமல மலர்மேல்*
செய்யாள் திருமார்வினில்சேர்* திருமாலே*
வெய்யார்சுடர்ஆழி* சுரிசங்கம்ஏந்தும்*
கையா உன்னைக்காணக்* கருதும் என்கண்ணே. (2)
ஆறாமதயானை* அடர்த்தவன்தன்னை*
சேறுஆர்வயல்* தென்குருகூர்ச் சடகோபன்*
நூறேசொன்ன* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
ஏறேதரும்* வானவர்தம் இன்உயிர்க்கே (2)
இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு* இங்கு எத்தனை*
என்னுயிர் நோவ மிழற்றேல்மின்* குயில் பேடைகாள்*
என்னுயிர்க் கண்ணபிரானை* நீர் வரக்கூவுகிலீர்*
என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்* இத்தனை வேண்டுமோ? (2)
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த* பல்ஊழிக்குத்*
தன்புகழ்ஏத்தத்* தனக்குஅருள் செய்தமாயனைத்*
தென்குருகூர்ச் சடகோபன்* சொல்ஆயிரத்துள் இவை*
ஒன்பதோடு ஒன்றுக்கும்* மூவுலகும் உருகுமே (2)
உருகுமால் நெஞ்சம்* உயிரின் பரமன்றி*
பெருகுமால் வேட்கையும்* என்செய்கேன் தொண்டனேன்*
தெருவுஎல்லாம் காவிகமழ்* திருக்காட்கரை*
மருவிய மாயன்தன்* மாயம் நினைதொறே. (2)
கடியனாய்க் கஞ்சனைக்* கொன்றபிரான் தன்னை*
கொடிமதிள் தென்குருகூர்ச்* சடகோபன்சொல்*
வடிவுஅமைஆயிரத்து* இப்பத்தினால் சன்மம்-
முடிவுஎய்தி* நாசம்கண்டீர்கள் எம்கானலே (2)
எம்கானல் அகம்கழிவாய்* இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்*
செங்கால மடநாராய்!* திருமூழிக்களத்து உறையும்*
கொங்குஆர் பூந்துழாய்முடி* எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்*
நும்கால்கள் என்தலைமேல்* கெழுமீரோ நுமரோடே. (2)
ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்* ஒண்சுடரை*
ஒழிவுஇல்லா அணிமழலைக்* கிளிமொழியாள் அலற்றியசொல்*
வழுஇல்லா வண்குருகூர்ச்* சடகோபன் வாய்ந்துஉரைத்த*
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்* நோய் அறுக்குமே (2)
அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*
நிறுத்தும் மனத்துஒன்றிய* சிந்தையினார்க்கு*
வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
குறுக்கும்வகை உண்டுகொலோ* கொடியேற்கே? (2)
கொடிஏர்இடைக்* கோகனகத்தவள் கேள்வன்*
வடிவேல் தடம்கண்* மடப்பின்னை மணாளன்*
நெடியான்உறை சோலைகள்சூழ்* திருநாவாய்*
அடியேன் அணுகப்பெறும்நாள்* எவைகொலோ!
வண்ணம் மணிமாட* நல்நாவாய் உள்ளானைத்*
திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*
பண்ணார் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*
மண்ணாண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. (2)
மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!* வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ*
செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!* செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*
அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்* ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்*
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு* புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! (2)
புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ! புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ*
பகலடுமாலைவண் சாந்தமாலோ!* பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*
அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து- அளந்து* எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்*
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்* இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?
இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்* இணைமுலை நமுக நுண்இடை நுடங்க*
துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து* துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*
தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்* தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்*
பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்* பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!
அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா* அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்*
அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி* அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*
அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த* ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு*
அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்! அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே! (2)
மாலைநண்ணித்* தொழுதுஎழுமினோ வினைகெட*
காலைமாலை* கமலமலர் இட்டு நீர்*
வேலைமோதும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து*
ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்* அடிஇணைகளே. (2)
பாடுசாரா* வினைபற்றுஅற வேண்டுவீர்*
மாடம்நீடு* குருகூர்ச்சடகோபன்* சொல்
பாடலானதமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்-
பாடிஆடிப்* பணிமின் அவன் தாள்களே (2)
தாள தாமரைத்* தடம்அணி வயல் திருமோகூர்*
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றுஇலம் கதியே. (2)
ஏத்துமின் நமர்காள்* என்றுதான் குடம்ஆடு-
கூத்தனைக்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
வாய்த்த ஆயிரத்துள் இவை* வண் திருமோகூர்க்கு*
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு* இடர் கெடுமே. (2)
கெடும் இடர்ஆயஎல்லாம்* கேசவா என்ன* நாளும்
கொடுவினை செய்யும்* கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
விடம்உடை அரவில்பள்ளி* விரும்பினான் சுரும்பலற்றும்*
தடம்உடை வயல்* அனந்தபுரநகர் புகுதும்இன்றே (2)
அந்தம்இல் புகழ்* அனந்தபுர நகர் ஆதிதன்னைக்*
கொந்துஅலர் பொழில்* குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*
ஐந்தினோடு ஐந்தும்வல்லார்* அணைவர்போய் அமர்உலகில்*
பைந்தொடி மடந்தையர்தம்* வேய்மரு தோள்இணையே. (2)
வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!* மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்*
காமரு குயில்களும் கூவும் ஆலோ!* கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*
ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு* ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ*
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!* தகவிலை தகவிலையே நீ கண்ணா! (2)
செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு* அத்திருவடி திருவடிமேல்* பொருநல்-
சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்* வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை* அவனொடும் பிரிவதற்கு இரங்கி* தையல்-
அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்- உரைத்தன* இவையும் பத்து அவற்றின் சார்வே. (2)
சார்வே தவநெறிக்குத்* தாமோதரன் தாள்கள்*
கார்மேக வண்ணன்* கமல நயனத்தன்*
நீர்வானம் மண்எரி கால்ஆய்* நின்ற நேமியான்*
பேர் வானவர்கள்* பிதற்றும் பெருமையனே. (2)
பற்றுஎன்று பற்றி* பரம பரம்பரனை*
மல் திண்தோள் மாலை* வழுதி வளநாடன்*
சொல் தொடைஅந்தாதி* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
கற்றார்க்கு ஓர்பற்றாகும்* கண்ணன் கழல்இணையே. (2)
கண்ணன் கழல்இணை* நண்ணும் மனம்உடையீர்*
எண்ணும் திருநாமம்* திண்ணம் நாரணமே. (2)
மேயான் வேங்கடம்* காயாமலர் வண்ணன்*
பேயார் முலைஉண்ட* வாயான் மாதவனே. (2)
மாதவன் என்றுஎன்று* ஓத வல்லீரேல்*
தீதுஒன்றும் அடையா* ஏதம் சாராவே.
சாரா ஏதங்கள்* நீரார் முகில்வண்ணன்*
பேர் ஆர் ஓதுவார்* ஆரார் அமரரே.
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்துஇப்பத்து அடியார்க்கு அருள்பேறே (2)
அருள்பெறுவார் அடியார் தம்* அடியனேற்கு* ஆழியான்-
அருள்தருவான் அமைகின்றான்* அதுநமது விதிவகையே*
இருள்தருமா ஞாலத்துள்* இனிப்பிறவி யான்வேண்டேன்*
மருள்ஒழி நீமடநெஞ்சே!* வாட்டாற்றான் அடிவணங்கே. (2)
வாட்டாற்றான் அடிவணங்கி* மாஞாலப் பிறப்புஅறுப்பான்*
கேட்டாயே மடநெஞ்சே!* கேசவன் எம் பெருமானைப்*
பாட்டுஆய பலபாடி* பழவினைகள் பற்றுஅறுத்து*
நாட்டாரோடு இயல்வுஒழிந்து* நாரணனை நண்ணினமே.
நண்ணினம் நாராயணனை* நாமங்கள் பலசொல்லி*
மண்உலகில் வளம்மிக்க* வாட்டாற்றான் வந்துஇன்று*
விண்உலகம் தருவானாய்* விரைகின்றான் விதிவகையே*
எண்ணின வாறுகா* இக்கருமங்கள் என்நெஞ்சே!
காட்டித்தன் கனைகழல்கள்* கடுநரகம் புகல்ஒழித்த*
வாட்டாற்று எம்பெருமானை* வளங்குருகூர்ச் சடகோபன்*
பாட்டாய தமிழ்மாலை* ஆயிரத்துள் இப்பத்தும்-
கேட்டு ஆரார் வானவர்கள்* செவிக்குஇனிய செஞ்சொல்லே. (2)
செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்* திருமாலிருஞ்சோலை*
வஞ்சக் கள்வன் மாமாயன்* மாயக் கவியாய் வந்து* என்-
நெஞ்சும் உயிரும் உள்கலந்து* நின்றார் அறியா வண்ணம்* என்-
நெஞ்சும் உயிரும் அவைஉண்டு* தானே ஆகி நிறைந்தானே. (2)
திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுஉடலே*
அருமாமாயத்து எனதுஉயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2)
மான்ஆங்காரம் மனம்கெட* ஐவர் வன்கையர் மங்க*
தான்ஆங்கார மாய்ப்புக்கு* தானே தானே ஆனானைத்*
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்* சடகோபன் சொல்ஆயிரத்துள்*
மான்ஆங்காரத்துஇவை பத்தும்* திருமாலிருஞ் சோலைமலைக்கே. (2)
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால்வந்து* என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
குருமா மணிஉந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால்சென்று சேர்விடம்* தென் திருப்பேரே. (2)
உற்றேன் உகந்து பணிசெய்து* உன்பாதம்-
பெற்றேன்* ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்சூழ்* திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே. (2)
நில்லா அல்லல்* நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர்வாழ்* குருகூர்ச் சடகோபன்*
சொல்லார் தமிழ்* ஆயிரத்துள் இவைபத்தும்-
வல்லார்* தொண்டர்ஆள்வது* சூழ்பொன் விசும்பே. (2)
சூழ்விசும் பணிமுகில்* தூரியம் முழக்கின*
ஆழ்கடல் அலைதிரைக்* கைஎடுத்து ஆடின*
ஏழ்பொழிலும்* வளம்ஏந்திய என்அப்பன்*
வாழ்புகழ் நாரணன்* தமரைக் கண்டுஉகந்தே. (2)
நாரணன் தமரைக் கண்டுஉகந்து* நல்நீர்முகில்*
பூரண பொன்குடம்* பூரித்தது உயர்விண்ணில்*
நீரணி கடல்கள்* நின்றுஆர்த்தன* நெடுவரைத்-
தோரணம் நிரைத்து* எங்கும் தொழுதனர்உலகே.
வந்துஅவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம்இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்துஅலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்கள்ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே. (2)
முனியே! நான்முகனே!* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-
கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*
தனியேன்ஆர்உயிரே!* என்தலை மிசையாய் வந்திட்டு*
இனிநான் போகல்ஒட்டேன்* ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே. (2)
கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய* என் அன்பேயோ*
நீலவரை இரண்டு பிறைகவ்வி* நிமிர்ந்தது ஒப்ப*
கோல வராகம்ஒன்றாய்* நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்*
நீலக் கடல்கடைந்தாய்!* உன்னைபெற்று இனிப் போக்குவனோ? (2)
சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*
சூழ்ந்ததனில் பெரிய* பரநல் மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*
சூழ்ந்ததனில் பெரிய* என் அவாஅறச் சூழ்ந்தாயே! (2)
அவாஅறச் சூழ்* அரியை அயனை அரனை அலற்றி*
அவாஅற்று வீடுபெற்ற* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
அவாஇல் அந்தாதிகளால்* இவைஆயிரமும்* முடிந்த-
அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்* பிறந்தார் உயர்ந்தே. (2)
SUBSCRIBE TO OUR WHATSAPP BROADCAST TO RECEIVE
TAMIL VEDAM UPDATES. FILL IN THE DETAILS BELOW AND CLICK JOIN US