பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
நீள்நாகம் சுற்றி* நெடுவரைநட்டு,* ஆழ்கடலைப்-
பேணான் கடைந்து* அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*
பூண்ஆர மார்வனை* புள்ஊரும் பொன்மலையை,*
காணாதார் கண்என்றும்* கண்அல்ல கண்டாமே (2)
நீள்வான் குறள்உருஆய்* நின்றுஇரந்து மாவலிமண்,*
தாளால் அளவிட்ட* தக்கணைக்கு மிக்கானை,*
தோளாத மாமணியை* தொண்டர்க்கு இனியானை,*
கேளாச் செவிகள்* செவிஅல்ல கேட்டாமே.
தூயானை* தூய மறையானை,* தென்ஆலி
மேயானை* மேவாள் உயிர்உண்டு அமுதுஉண்ட
வாயானை* மாலை வணங்கி* அவன்பெருமை
பேசாதார்* பேச்சுஎன்றும் பேச்சுஅல்ல கேட்டாமே.
கூடா இரணியனைக்* கூர்உகிரால் மார்வுஇடந்த,*
ஓடா அடல்அரியை* உம்பரார் கோமானை,*
தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,* ஆர்வத்தால்-
பாடாதார் பாட்டுஎன்றும்* பாட்டுஅல்ல கேட்டாமே.
மைஆர் கடலும்* மணிவரையும் மாமுகிலும்,*
கொய்ஆர் குவளையும் காயாவும்* போன்றுஇருண்ட*
மெய்யானை மெய்ய மலையானை* சங்குஏந்தும்
கையானை கைதொழா* கைஅல்ல கண்டாமே.
கள்ஆர் துழாயும்* கணவலரும் கூவிளையும்,*
முள்ஆர் முளரியும்* ஆம்பலும்முன் கண்டக்கால்,*
புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்* புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
உள்ளாதார் உள்ளத்தை* உள்ளமாக் கொள்ளோமே.
கனைஆர் கடலும்* கருவிளையும் காயாவும்*
அனையானை,* அன்பினால் ஆர்வத்தால்,* என்றும்-
சுனைஆர் மலர்இட்டு* தொண்டராய் நின்று,*
நினையாதார் நெஞ்சுஎன்றும்* நெஞ்சுஅல்ல கண்டாமே.
வெறிஆர் கருங்கூந்தல்* ஆய்ச்சியர் வைத்த*
உறிஆர் நறுவெண்ணெய்* தான்உகந்து உண்ட
சிறியானை* செங்கண்* நெடியானை சிந்தித்து-
அறியாதார்* என்றும் அறியாதார் கண்டாமே.
தேனொடு வண்டுஆலும்* திருமாலிருஞ்சோலை,*
தான்இடமாக் கொண்டான்* தடமலர்க் கண்ணிக்காய்,*
ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு* ஆள்ஆனார் அல்லாதார்,*
மானிடவர் அல்லர் என்று* என்மனத்தே வைத்தேனே. (2)
மெய்ந்நின்ற* பாவம் அகல,* திருமாலைக்-
கைந்நின்ற ஆழியான்* சூழும் கழல்சூடிக்,*
கைந்நின்ற வேல்கைக்* கலியன் ஒலிமாலை,*
ஐயொன்றும் ஐந்தும்* இவைபாடி ஆடுமினே. (2)