பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    குன்றம் எடுத்து மழைதடுத்து*  இளையாரொடும்*
    மன்றில் குரவை பிணைந்த மால்*  என்னை மால்செய்தான்,*

    முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்*  கிடந்தீர்கின்ற*
    அன்றிலின் கூட்டைப்*  பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ!   (2)


    பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து*  அரிமாச்செகுத்து,*
    ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு*  வன் பேய்முலை-

    வாங்கி உண்ட,*  அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய்,*
    ஏங்கு வேய்ங்குழல்*  என்னோடாடும் இளமையே!.


    மல்லோடு கஞ்சனும்*  துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
    அல்லி மலர்த்தண்துழாய்*  நினைந்திருந்தேனையே,*

    எல்லியில் மாருதம்*  வந்தடும், அதுவன்றியும்,*
    கொல்லை வல்லேற்றின் மணியும்*  கோயின்மை செய்யுமே!.


    பொருந்து மாமரம்*  ஏழும் எய்த புனிதனார்*
    திருந்து சேவடி*  என்மனத்து நினைதொறும்,*

    கருந்தண் மாகடல்*  மங்குலார்க்கும் அதுவன்றியும்,*
    வருந்த வாடை வரும்*  இதற்கினி என்செய்கேன்!


    அன்னை முனிவதும்*  அன்றிலின் குரல் ஈர்வதும்,*
    மன்னு மறிகடல் ஆர்ப்பதும்*  வளை சோர்வதும்*

    பொன்னங் கலையல்குல்*  அன்ன மென்னடைப் பூங்குழல்,*
    பின்னை மணாளர்*  திறத்தவாயின பின்னையே


    ஆழியும் சங்கும் உடைய*  நங்கள் அடிகள்தாம்,*
    பாழிமையான கனவில்*  நம்மைப் பகர்வித்தார்,*

    தோழியும் நானும்  ஒழிய*  வையம் துயின்றது,*
    கோழியும் கூகின்றதில்லைக்*  கூரிருள் ஆயிற்றே!. 


    காமன் தனக்கு முறையல்லேன்*  கடல் வண்ணனார்,*
    மாமணவாளர்*  எனக்குத் தானும் மகன்சொல்லில்,*

    யாமங்கள் தோறும் எரி வீசும்*  என்னிளங் கொங்கைகள்,*
    மாமணி வண்ணர்*  திறத்த வாய் வளர்கின்றவே!


    மஞ்சுறு மாலிருஞ் சோலை*  நின்ற மணாளனார்,*
    நெஞ்சம் நிறைகொண்டு போயினார்*  நினைகின்றிலர்,*

    வெஞ்சுடர் போய் விடியாமல்*  எவ்விடம் புக்கதோ,*
    நஞ்சு உடலம் துயின்றால்*  நமக்கினி நல்லதே! 


    காமன் கணைக்கு ஓர்இலக்கம்ஆய்*  நலத்தில்மிகு,*
    பூமரு கோல*  நம் பெண்மை சிந்தித்திராது போய்*

    தூமலர் நீர்கொடு*  தோழி.நாம் தொழுதேத்தினால்*
    கார்முகில் வண்ணரைக்*  கண்களால் காணலாம் கொலோ!.


    வென்றி விடையுடன்*  ஏழடர்த்த அடிகளை,*
    மன்றில் மலிபுகழ்*  மங்கைமன் கலிகன்றிசொல்,*

    ஒன்று நின்ற ஒன்பதும்*  உரைப்பவர் தங்கள்மேல்*
    என்றும் நில்லா வினை*  ஒன்றும் சொல்லில் உலகிலே  (2)