பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
குன்றம் ஒன்று எடுத்துஏந்தி,* மாமழை-
அன்று காத்த அம்மான்,* அரக்கரை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,?*
தென்றல் வந்து* தீ வீசும் என்செய்கேன்! (2)
காரும் வார்பனிக்* கடலும் அன்னவன்,*
தாரும் மார்வமும்* கண்ட தண்டமோ,*
சோரும் மாமுகில்* துளியின் ஊடுவந்து,*
ஈர வாடைதான்* ஈரும் என்னையே!
சங்கும் மாமையும்* தளரும் மேனிமேல்,*
திங்கள் வெம்கதிர்* சீறும் என்செய்கேன்,*
பொங்கு வெண்திரைப்* புணரி வண்ணனார்,*
கொங்குஅலர்ந்ததார்* கூவும் என்னையே!
அங்குஓர் ஆய்க்குலத்துள்* வளர்ந்து சென்று,*
அங்குஓர்* தாய்உருஆகி வந்தவள்,*
கொங்கை நஞ்சுஉண்ட* கோயின்மை கொலோ,*
திங்கள் வெம்கதிர்* சீறுகின்றதே.
அங்குஓர் ஆள்அரிஆய்,* அவுணனை-
பங்கமா* இருகூறு செய்தவன்,*
மங்குல் மாமதி* வாங்கவே கொலோ*
பொங்கு மாகடல்* புலம்பு கின்றதே!
சென்றுவார்* சிலை வளைத்து இலங்கையை-
வென்ற வில்லியார்* வீரமே கொலோ,*
முன்றில் பெண்ணைமேல்* முளரிக் கூட்டகத்து,*
அன்றிலின் குரல்* அடரும் என்னையே!
பூவை வண்ணனார்* புள்ளின் மேல்வர,*
மேவி நின்றுநான்* கண்ட தண்டமோ,*
வீவுஇல்ஐங்கணை* வில்லி அம்புகோத்து,*
ஆவியே இலக்குஆக எய்வதே!
மால் இனம்துழாய்* வரும் என் நெஞ்சகம்,*
மாலின் அம்துழாய்* வந்து என்உள்புக,*
கோல வாடையும்* கொண்டு வந்ததுஓர்*
ஆலி வந்ததால்* அரிது காவலே!
கெண்டை ஒண்கணும் துயிலும்,* என்நிறம்-
பண்டு பண்டு போல்ஒக்கும்,* மிக்கசீர்த்
தொண்டர் இட்ட* பூந்துளவின் வாசமே,*
வண்டு கொண்டு வந்து* ஊதுமாகிலே
அன்று பாரதத்து* ஐவர் தூதனாய்ச்,*
சென்ற மாயனை* செங்கண் மாலினை,*
மன்றில்ஆர் புகழ்* மங்கை வாள்கலி,*
கன்றி சொல்வல்லார்க்கு* அல்லல் இல்லையே (2)