பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
சந்த மலர்க்குழல் தாழ* தான் உகந்துஓடி தனியே-
வந்து,* என் முலைத் தடம்தன்னை வாங்கி* நின் வாயில் மடுத்து,*
நந்தன் பெறப்பெற்ற நம்பீ!* நான் உகந்துஉண்ணும் அமுதே,*
எந்தை பெருமானே! உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே (2)
வங்க மறிகடல் வண்ணா!* மாமுகிலே ஒக்கும் நம்பீ*
செங்கண் நெடிய திருவே* செங்கமலம் புரை வாயா,*
கொங்கை சுரந்திட உன்னைக்* கூவியும் காணாது இருந்தேன்*
எங்குஇருந்து ஆயர்களோடும்* என் விளையாடுகின்றாயே
திருவில் பொலிந்த எழில்ஆர்* ஆயர்தம் பிள்ளைகளோடு*
தெருவில் திளைக்கின்ற நம்பீ* செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*
உருகிஎன் கொங்கையின் தீம்பால்* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,*
மருவிக் குடங்கால் இருந்து* வாய்முலை உண்ண நீ வாராய்
மக்கள் பெறுதவம் போலும்* வையத்து வாழும் மடவார்*
மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்* முதல்வா மதக்களிறுஅன்னாய்*
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி* நின் கையில் தருவன்*
ஒக்கலை மேல்இருந்து* அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்
மைத்த கருங்குஞ்சி மைந்தா!* மாமருதுஊடு நடந்தாய்,*
வித்தகனே விரையாதே* வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*
இத்தனை போதுஅன்றி என்தன்* கொங்கை சுரந்து இருக்ககில்லா,*
உத்தமனே! அம்மம் உண்ணாய்* உலகுஅளந்தாய் அம்மம் உண்ணாய்
பிள்ளைகள் செய்வன செய்யாய்* பேசின் பெரிதும் வலியை*
கள்ளம் மனத்தில் உடையை* காணவே தீமைகள் செய்தி*
உள்ளம் உருகி என் கொங்கை* ஓட்டந்து பாய்ந்திடுகின்ற*
பள்ளிக் குறிப்புச் செய்யாதே* பால்அமுது உண்ணநீ வாராய்
தன்மகன்ஆக வன் பேய்ச்சி* தான்முலை உண்ணக் கொடுக்க*
வன்மகன்ஆய் அவள் ஆவிவாங்கி* முலைஉண்ட நம்பீ*
நன்மகள் ஆய்மகளோடு* நானில மங்கை மணாளா*
என்மகனே! அம்மம் உண்ணாய்* என் அம்மம் சேமம் உண்ணாயே
உந்தம் அடிகள் முனிவர்* உன்னைநான் என்கையில் கோலால்*
நொந்திட மோதவும் கில்லேன்* நுங்கள்தம் ஆ-நிரை எல்லாம்*
வந்து புகுதரும் போது* வானிடைத் தெய்வங்கள் காண*
அந்திஅம் போது அங்கு நில்லேல்* ஆழிஅம் கையனே! வாராய்
பெற்றத் தலைவன் எம்கோமான்* பேர்அருளாளன் மதலாய்,*
சுற்றக் குழாத்து இளங்கோவே!* தோன்றிய தொல்புகழாளா,*
கற்றுஇனம் தோறும் மறித்து* கானம் திரிந்த களிறே*
எற்றுக்குஎன் அம்மம் உண்ணாதே* எம்பெருமான் இருந்தாயே
இம்மை இடர்கெட வேண்டி* ஏந்துஎழில் தோள்கலி அன்றி*
செம்மைப் பனுவல்நூல் கொண்டு* செங்கண் நெடியவன் தன்னை*
அம்மம் உண்என்று உரைக்கின்ற* பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
மெய்ம்மை மனத்து வைத்துஏத்த* விண்ணவர் ஆகலும்ஆமே (2)
சார்வே தவநெறிக்குத்* தாமோதரன் தாள்கள்*
கார்மேக வண்ணன்* கமல நயனத்தன்*
நீர்வானம் மண்எரி கால்ஆய்* நின்ற நேமியான்*
பேர் வானவர்கள்* பிதற்றும் பெருமையனே. (2)
பெருமையனே வானத்து இமையோர்க்கும்* காண்டற்கு-
அருமையனே* ஆகத்தணை யாதார்க்கு* என்றும்-
திருமெய் உறைகின்ற* செங்கண்மால்* நாளும்-
இருமை வினைகடிந்து* இங்கு என்னைஆள்கின்றானே.
ஆள்கின்றான் ஆழியான்* ஆரால் குறைவுஉடையம்?*
மீள்கின்றதுஇல்லை* பிறவித் துயர்கடிந்தோம்*
வாள்கெண்டை ஒண்கண்* மடப்பின்னை தன்கேள்வன்*
தாள்கண்டு கொண்டு* என் தலைமேல் புனைந்தேனே.
தலைமேல் புனைந்தேன்* சரணங்கள்* ஆலின்-
இலைமேல் துயின்றான்* இமையோர் வணங்க*
மலைமேல்தான் நின்று* என்மனத்துள் இருந்தானை*
நிலைபேர்க்கல்ஆகாமை* நிச்சித்துஇருந்தேனே.
நிச்சித்துஇருந்தேன்* என்நெஞ்சம் கழியாமை*
கைச்சக்கரத்துஅண்ணல்* கள்வம் பெரிதுஉடையன்*
மெச்சப்படான் பிறர்க்கு* மெய்போலும் பொய்வல்லன்*
நச்சப்படும் நமக்கு* நாகத்து அணையானே.
நாகத்து அணையானை* நாள்தோறும் ஞானத்தால்*
ஆகத்தணைப் பார்க்கு* அருள்செய்யும் அம்மானை*
மாகத்து இளமதியம்* சேரும் சடையானைப்*
பாகத்து வைத்தான் தன்* பாதம் பணிந்தேனே.
பணிநெஞ்சே! நாளும்* பரம பரம்பரனை*
பிணிஒன்றும் சாரா* பிறவி கெடுத்துஆளும்*
மணிநின்ற சோதி* மதுசூதன் என்அம்மான்*
அணிநின்ற செம்பொன்* அடல்ஆழி யானே.
ஆழியான் ஆழி* அமரர்க்கும் அப்பாலான்*
ஊழியான் ஊழி படைத்தான்* நிரைமேய்த்தான்*
பாழிஅம் தோளால்* வரைஎடுத்தான் பாதங்கள்*
வாழி என்நெஞ்சே!* மறவாது வாழ்கண்டாய்.
கண்டேன் கமல மலர்ப்பாதம்* காண்டலுமே*
விண்டே ஒழிந்த* வினையாயின எல்லாம்*
தொண்டேசெய்து என்றும்* தொழுது வழியொழுக*
பண்டே பரமன் பணித்த* பணிவகையே.
வகையால் மனம்ஒன்றி* மாதவனை* நாளும்-
புகையால் விளக்கால்* புதுமலரால் நீரால்*
திசைதோறு அமரர்கள்* சென்று இறைஞ்ச நின்ற*
தகையான் சரணம்* தமர்கட்குஓர் பற்றே.
பற்றுஎன்று பற்றி* பரம பரம்பரனை*
மல் திண்தோள் மாலை* வழுதி வளநாடன்*
சொல் தொடைஅந்தாதி* ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்*
கற்றார்க்கு ஓர்பற்றாகும்* கண்ணன் கழல்இணையே. (2)