- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸாந்தீபினிக்கு எம்பெருமான் திருவருள்செய்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம்புகுகிறாரிதில். ஸாந்தீபினியின் வேண்டுகோளைப் பூர்த்திசெய்ததுபோல அடியேன் வேண்டுகோளையும் நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகின்றாராயிற்று. இடைப்பிள்ளையான கண்ணபிரான் ஸாந்தீபினியிடத்தில் வேதமோதின னென்பதும் உபநயநஸம்ஸ்சாரம் பெற்றனனென்பதும் எங்ஙனே சேருமென்று சிலர் சங்கிப்பர்; ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனா யொளித்து வளர்ந்தவனான கண்ணன் க்ஷத்ரிய ஜாதியிற் பிறந்தவன். பிராமணர் க்ஷத்ரியர் வைசியர் என்னும் மூன்று ஜாதியாரும் தேஹோத்பத்தியாகிய இயற்கைப் பிறப்புடனே செயற்கைப் பிறப்பாக உபநயனமென்கிற ஸம்ஸ்காரத்தாலாகும் ஜ்ஞாநஜந்மத்தையுங்கொண்டு இருபிறப்பாளராய் ‘த்விஜர்’ எனப்படுவரென்க. உவனியம் - உபநயனமென்ற வடசொல்லின் சிதைவு. பூணூல் தரிக்குஞ்சடங்கு. மாணாக்கனை ஆசாரியள் தன்னிடத்தே வைத்துக்கொள்ளுதல் என்று பதப்பொருள்.
English Translation
Then in yore the most learned Rishi begot Markandeya whom yama had a claim on, Fearing whom the child prayed to your lotus feet, when you gave him Abhayam and then rescued him. Then you gave him the shade of your lotus-feet abidingly sought by the seeker. Ocean-hued Lord. I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்