- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை* காண்டலுமே-
தொண்டு கொண்டேன்* அவன் தொண்டர் பொற்றாளில்* என் தொல்லை வெம்நோய்-
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை* வாய்மடுத்து இன்று-
உண்டு கொண்டேன்,* இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே.
காணொளி
பதவுரை
எம் இராமாநுசன் தன்னை - ஸ்வாமி எம்பெருமானாரை;
இன்று கண்டு கொண்டேன் - இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்;
காண்டலுமே - இப்படி தெரிந்து கொண்டவளலிலே;
அவன் தொண்டர் பொன் தாளில் - அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில்;
தொண்டு கொண்டேன் - அடிமைப்பட்டேன்; (அதனால்);
விளக்க உரை
இனிமேலும் எம்பெருமானார் திருவருளால் நான் பெறப்போகிற நன்மைகள் அளவற உண்டு; எனினாம் இன்றளவும் நான் பெற்ற பேறுகளுக்கு எல்லையுண்டோ வென்றாராயிற்று.
English Translation
I have found my Ramanuja; by which act, I have become a servant of his devotees feet; by which process, I have cut as under my age-old karmic ills. Today I have drunk deep from the river of his glory-flood. If I were to say more, there will be no end to it.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்