- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானுடைய திருநாட்டிலே பேரின்பம் நுகர்ந்திருக்கப் பெற்றாலும் அத்தோடே கீழ்ச்சிசொன்ன ஐச்வர்யாதிகளெல்லாம் சேரக்கூடினாலும் இங்கே பாகவதர்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழிபாடி ரஸிக்குமதோடொக்குமோ வென்கிறார். (வழிபட்டோட அருள் பெற்று இத்யாதி) க்ஷணகாலமும் விச்சேதமில்லாமல் நித்யகைங்கரியம் பண்ணும்படியான அவனருளைப் பெற்றுத் திருநாட்டிலே அவனது மலர்த்தாமரைப் பாதங்களின் கீழே அந்தமில் பேரின்பமெய்தியிருக்கப்பெற்றாலும் என்றபடி. இழிபட்டோடு முடலினிற் பிறந்து – தாழ்வுக்கு எல்லையாம்படி கைகழியப்போன சரீரத்திலேபிறந்து. திருநாட்டிலே கைங்கரியம் ஞானமும் பொல்லாவொழுக்கும் நிறைந்த அழுக்குடம்போடே கூடியிருக்கப்பெற்றாலும் என்றபடி. தன் சீர்யான்கற்று மொழிபட்டோடுங் கவியமுத நுகர்ச்சி உறுமோ? பரம போக்யனான அவனுடைய திருக்குணங்களை நீசனேன் நிறையொன்றுமிலேனான நான் அப்ஸித்து அவ்வநுபவத்தாலுண்டான ப்ரீதி சொற்களாகப் புறவெள்ளமிட்டு அதுவே அம்ருதமாக, அதுதன்னை அன்பர்களோடே கூடி ரஷிக்கையுண்டே, இதற்கு எந்த இன்பமும் ஈடாகாது என்றாராயிற்று * தொண்டாக்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் * என்றபடி திருவாய்மொழி பாடுகையாகிற விதுவும் பாகவத் கைங்கர்பங்களிலே ஒன்றாகையாலே இவ்விஷயத்தை இத்திருவாயெமொழியிலருளிச் செய்தவிது மிகப் பொருந்தும்.
English Translation
Were I blest with service to his lotus feet, were I to enjoy his swirling flood of heavenly radiance, would that compare with this birth, -albeit in a lowly body, -where I sit and enjoy singing his names in a flood of sweet poetry?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்