- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருப்புலியூரின் வைதிகஸம்ருத்தியையுங்கண்டு இத்தலைவி அவ்வூர்த்தலைவன் பக்கலிலேயீடுபாடு கொண்டாளென்கிறான் தோழி. தாய்மார் தோழியை நோக்கி “இப்பெண்பிள்ளை நாங்கள் உன்கையில் காட்டிக்கொடுத்திருக்க, இவள் அதிப்ரவ்ருத்தி பண்ணும்படி நீ எங்ஙனே விட்டிருந்தாய்? என்று கேட்க, அதற்குத் தோழி உத்தரங் கூறுகின்றாள் போலும் –அன்னைமீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்? –இவள் எனக்கு விதேயை என்று சொல்லுவேனோ? இவளுடைய அதிப்ரவ்ருத்திக்கு நானும் கூட்டாயிருந்தேனென்று சொல்லுவேனோ? இவள் என்னைக் கடந்து போனாளென்று சொல்லுவேனோ? என்ன பாசுரமிட்டுச் சொல்லுவேன்? எனக்கொன்றும் தெரிகிறதில்லையேயென்று கையைப் பிசைகிறாள் தோழி. மல்லைச்செல்வ வடமொழி மறைவாணர் –தமிர்வேத்த்தில் ஊன்றியிருக்குமிவள் வடமொழிவேதம் வல்லார் வாழுமிடத்திலே ப்ரணையானாள். தமிழ்வேத்த்திற்கு நோக்கு அர்ச்சாவதார கைங்கரியம், வடமொழி வேத்த்திற்கு நோக்கு தேவதாந்தர்யாமிஸமாராதனம், அதாவது யஜ்ஞயாகாதிகள். அவ்வடமொழி வேதம் வல்லவர்கள் நெருப்பிலே நெய்யைக் கொட்டி ஹோமங்கள் பண்ண, அதினின்று கிளம்பின பவித்திரமான புகையானது விண்ணுலகமளவும் வளர்ந்து அங்குள்ள விமானசாரிகளின் கண்ணை மறைக்கின்றதாம், இவ்வதிசயோக்திகளினால் யஜ்ஞயாகங்களின் சிறப்பு தெரிவிக்கப்பட்டதாகும். இப்படிச் சிறப்பாக வைதிக்க்ரியைகள் நடைபெறுமிடமானது திருநாம்மல்லது வேறொன்று சொல்லவறியாதவிவள் அப்பெருமானையே மணவாளனாகக் கொண்டாளென்னுமிடத்து ஐயமுண்டோ.
English Translation
O Ladies! How can I make you understand? Good scholars of the Sanskrit Vedas feed the fire whose smoke clouds the land of the celestials in cool Puliyur, home of the serpent recliner, she only prates his names forever
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்