- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஆறாயிரப்படியருளிச் செயல்காண்மின், “அவன் ஸௌந்தர்ய சீலாதிகுணங்களை உடையனானாலென், வேறேயொருவனை அந்வேஷித்து அவனுக்கும் கொடுக்கக் கடவதாய்ச் சொல்லாநின்றபின்பு இனிச் செய்யலாவதில்லை யென்று தாயர் சொல்ல, தோழியானவள், இயற்கையிற்புணர்ச்சியைச் சொல்லுகை ஈடன்றியேயிருக்கச் செய்தே “இவளயிழக்கிறோம் என்னும் பயத்தாலே முன்னமே திருப்புலியூர் முனைவனான ஸர்வேச்வரனிவளோடே புணர்ந்தருளினானென்கிறாள்“ என்று. தோழியானவள் தலைமகளிடத்து மூன்று விசேஷங்களை யெடுத்துச் சொல்லி, இவளுக்கு திருப்புலியூர்ப் பெருமானோடு கல்வி நேர்ந்திராவிடில் இங்ஙனே காணவொண்ணாது என்று தன்னுடைய அநுமானத்தைத் திடப்படுத்துகின்றாள். புனையிழைகளணிவும் –ஆபரணங்கள் பரம் பூட்டினாப்போலே யிருந்த்தோ? அப்படியில்லையே, கலைத்துப் பூண்டபடி காணா நின்றதே. ஆடையுடையும் –கூறையுடையும் நாமுடுத்தினபடியில்லையே, முகத்தலைபார்த்து உடுத்ததாயோ இருக்கிறது? வேறுபாடு தெரியவில்லையா? புதுக்கணிப்பும் –இவளது வடிவிலே பிறந்த புதுமைகள் தெரியவில்லையோ? இதற்கு முன்பு கோடையோடின வயல்போலே யன்றோ இருந்தது, இப்போது நீர்பாய்ந்த வயல்போலே காண்கிறதில்லையோ? நின்று நினைக்கப்புக்கால் நினையும் நீர்மையதன்று இவட்கிது –எம்பெருமானுடைய படிகளையே நினைக்கமுடியாதபோது அவன் திறத்திலீடுபட்டாருடைய படிகள் நினைக்கப்போமோ? * நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணேயூணென்று மீனச்சொல்லே * என்ற திருவாக்கினாலேயே இப்பாசுரமும் வெளிவந்தபடி பாரீர்.
English Translation
The jewels and the dress the wears, the joy in her face, -ever wondered where they came from ? Oh, it is unthinkable ! In the cool tank of Tiruppuliyur, where a large lotus blooms, she immersed herself in the grace of the Lord of the worlds!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்