- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவு கரந்து – ஸ்ரீ ராமாயண யுத்தகாண்டத்தில் (ஸர்க்கம் -94) மூல பல வதம் சொல்லுமிடத்து இந்த நிலைதெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமாள் காந்தர்வாஸ்த்ர ப்ரயோகம் பண்ணின வளவிலே (ச்லோ-26). ••• தத்ருசிரே ராமம் தஹந்த மரிவாஹிநீம், மோஹிதா பரமாஸ்க்ரேண காந்தர்வேண மஹாத்மநா.) என்று அரக்கர்கள் இராமனை அடியோடு காணவில்லையென்று முதலிலே சொல்லிற்று. இங்கு இருபத்தினாலாயிரப்படி வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் காண்மின் – “ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து உருக்கெட வாளிபொழிந்த வொருவன் என்று கீழோடே அந்விதமாகக் கடவது. மூல பலம் சாகும்படி. அருளுகிறவன்று முந்துற வொருவனாய்த் தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த் தோற்றி வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூப்க்ரஹணம் அரிதாய் – உருக்கெட வாளிபொழிந்த வொருவன் என்று அந்வயம்.“ (திருவமர் மார்வன் திருக்கடித்தானத்தை மருவியுறைகின்ற மாயப்பிரான் உள்ளுந்தோறும் தித்திப்பான்) பெரிய பிராட்டியாரோடு கூடியிருக்கச் செய்தேயும் அவளைவிட்டு அவள் பரிகரமான என்னிடத்தலே ப்ராவண்யங்கொண்ட பெருமான் நானுகந்தவிடமென்று திருக்கடித்தானப் பதியை யுகந்து எனக்குப் பரமபோக்யனாயிரா நின்றானென்கை.
English Translation
The Lord was one, then two, then became three, then mingled himself into all, sweetly in my heart. The wonder-Lord resides in Tirukkadittanam with the dame-of-lotus Lakshmi on his chest
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்