- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(இன்னமுதென) எனக்குண்டான ப்ரக்ருதி ஸம்பந்தத்தையறுத்து, மனமொழி மெய்களாலே உன்னையே நான் நிரந்தரமாக அநுபவிக்கும்படி பண்ணி யருளவேணுமென்கிறார். முன்னம் அநுபவிக்குங்காலத்தில் அமுதம்போல் பரமபோக்யமாகத் தோற்றுவதும், பிறகு பரிபாகத்தில் விஷமாயிருப்பதும சப்தாதி விஷயங்களுக்குண்டான இயல்பு. இங்கு “இன்னமுதெனத் தோன்றி” என்று முன்னம் தோன்றுகிற ரீதி மாத்திரமே சொல்லப்பட்டது; பரிணாமத்தில் விஷமாகும் தென்னுமிடம் இங்குச் சொல்லிற்றில்லையேயாகிலும் அது சொற்போக்கில் அர்த்தாத் ஸித்தம். இத்திருவாய்மொழியில் பாசுரந்தோறும் ஐவர் என வருவது பஞ்சேந்திரியங்களைக் குறிக்குமதாயினும் இப்பாசுரத்தில் ஐவரென்பது சப்தாதி பஞ்ச விஷயங்களைக் குறிக்குமதாக ஆசாரியர்கள் வியாக்கியான மருளியுள்ளார்கள். ஈடு காண்மின்;- “(ஒரைவர்) தனித்தனியே ப்ரபலமாய் அத்வித்யமான சப்தாதி விஷயங்கள் ஐந்தும்.” குருயிரமும் ஒன்பதினாயிரமும் இருப்பத்துதாலாயிரமும் இப்படியே. பன்னீராயிரவுரைகாரர் மாத்திரம் “ஐவர் -ஐந்து இந்த்ரியங்களாலே என்று உரையிட்டார்.
English Translation
The five senses you gave can deceived anyone as sweet ambrosia. My Master! My Krishna! Lord of celestials! Grant that I may be rid of timeless Maya, root and all, that I may contemplate, sing and worship your symbols and forms
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்