- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(ஒசிந்தநுண்ணிடை) என் மகள்தான் எம்பெருமானை விரும்பிச் செய்றாளோ அவன் பெரியபிராட்டியார்க்கு வல்லபன் என்னுமிடம் இவள் அறியாள்போலும், “அவள் பக்கலிலே வியாமோஹங் கொண்டிருக்குமிவன் நம்மை லக்ஷியம் பண்ணுவனோ?“ என்று இப்பெண்பிள்ளை நினைக்க வேண்டியிருக்க அங்ஙனம் நினையாமல் அப்பெரிய பிராட்டியாருடைய புருஷகாரபலத்தாலே நமக்கொரு குறையிராது என்று நினைத்தோ, அவ்விருவருமான சேர்த்தியழகைச் சேவிப்போமென்று நினைத்தோ திருக்கோளூர்க்கேசெல்லப் புறப்பட்டாள், இவள் அத்தனைதூரம் வழிநடந்துசெல்ல வல்லளோ? எங்ஙனே சென்று சேர்ந்திருப்பவள் என்கிறாள் திருத்தாய். வழி நடக்கும்போது சிறிதும் சிரமமின்றியே நடந்து செல்பவர்கள் கையை வீசிக்கொண்டு போவார்கள், அப்படியல்லாமல் கிராமத்தினால் இளைத்துப் போமவர்கள் இடுப்பின்மீது கையை ஊன்ற வைத்துக்கொண்டு சிரமம் ஸ்புஷ்டமாகத் தெரியுமபடி செல்வர்கள். இஃது உலகிற்காணும் இயற்கையாதலால், தன்மகளுடைய மேனிமெலிவை அநுஸந்தித்த திருத்தாயார் அவள் மிகவும் சிரமத்தோடுதான் செல்ல நேருமென்பதை ஊஹித்து முதலடி கூறுகின்றாள். சிரமத்தை ஸஹித்துக்கொண்டு ஒருபடி நடந்துசென்றாலும், நெஞ்சு ஸ்வாதீனமாய், கண் நிராபாதமாயிருந்த்தாகில் குறையில்லை,நெஞ்சும் கசிந்து கண்ணும் நீர்துளும்ப நிற்குமிவள் எங்ஙனே வழிதெரிந்து போகவல்லள் என்கிறாள் இரண்டாமடியால். இப்பெண்பிள்ளை, தானும் நானுமாக இருந்த சேர்த்தியைத் தவிர்த்து, பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியைக் காணவேண்டியெ போலுமேன்கிறாள் பின்னடிகளால் – காரிகை அழகுடைய பெண்.
English Translation
Resting her hands on her waist, dragging herself painfully, did she walk with a seething heart and brimming eyes to reach the Lord of the lotus-dame in Tirukkolur? Alas, my daughter has forsaken me for her Love!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்