- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(பிறந்தவாறு.) கண்ணபிரானுடைய அவதாராதிகளைக் சுருங்கவருளிச் செய்து ‘அந்தோ’! இவை என்னை மருமத்திலே நலியாகின்றனவே; தரித்து உன்னையநுஸந்திக்க முடியவில்லையே! என்று தளர்கின்றார். கர்மவச்யரான ஸம்ஸாரிகள் கர்ப்பவாஸம் பண்ணிப் பிறக்குமாபோலே தானும் கிருபாவச்யனாய் கர்ப்பவாஸம் பண்ணிப் பிறந்தவை என்னே! என்று பிறந்தவாறும்! என்று சொல்லி ஆறுமாதம் மோஹித்துக் கிடந்தாராக ப்ரஸித்தம். பிறந்தவாற்றை விட்டு வளர்ந்தவாற்றிலே சென்று ஈடுபடுகிறார் வளர்ந்தவாறும் என்று *ஒருத்தி மகனாய்ப் பிறந்த ஓரிரவிலொருத்திமகனா யொளித்துவளர்ந்தவாறு என்னே! *கஞ்சனுங் காளியனுங் களிறுமருது மெருதும் வஞ்சனையின் மடிவ வளர்ந்தவாறு என்னே’ என்று ஸ்திமிதராகிறார். பாண்டவர்களுக்காக அபரிச்சேத்யமான பாரத ஸேநையை அணிகுத்தும், ஆயுத மெடேனென்னு சொல்லிவைத்து ஆயுதமெடுத்தும், பகலையிரவாக்கியும், அது போதல் தேரோட்டுதல் முதலியன செய்தும், இப்படிச் பசங்க சீர்மையறியாத இந்நொடுவுலகத்திலே யிராமே எழுந்தருளின ஆச்சரியங்களும் என்னே! இன்னாரை இன்னபடி கொல்லவேணுமென்று எதிரிகளுயிர்நிலைகளைக் காட்டிக் கொடுத்தமையைப் பற்றி “ஐவர்க்குத்திறங்கள் காட்டிவிட்டு” எனப்பட்டது. முன்னடிகளில் அநுஸந்திக்கப்பட்டதெல்லாம் தம்முடைய ஆத்மாவை மர்மத்திலே புக்குவிடாதேநின்று சிதிலமாக்கி முடிக்கிறபடியைப் பேசி, பிரானே! உருகாதே கரையாதே தரித்துநின்று உன்னைப் பேசி மகிழும்வகை சொல்லாயென்கிறார் பின்னடிகளில்.
English Translation
The wonders of your birth, your childhood, and your exploits in the great Bharata war, showing your strength to the five Pandavas, -these haunt my heart again and again and consume my soul. O Effulgent Lord, most high, when will I join you?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்