- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(தளிர்நிறத்தால்) இராமபிரானுடைய சேஷத்வத்திற்கு உறுப்பல்லாத அறிவு எனக்கு வேண்டாவென்கிறாள். ஸீதாபிராட்டியைக் குறிக்கவேண்டுமிவ்விடத்தில் தனிச் சிறையில் விளப்பற்ற என்றருளிச்செய்தது அப்பிராட்டியினுடைய ஒப்புயர்வற்ற பிரபாவாதிஸயத்தை வெளியிடுதற்கேயாம். தேவதேவ திவ்யமஹிஷியான தன் பெருமையையும் சிறையிருப்பின் தண்மையையும் பாராதேஇ தேவஸ்த்ரீகளின் சிறையை விடுக்கைக்காகப் பிராட்டி தான் சிறை யிருந்தது கருணையின் மிகுதியாலாகுமத்தனை. குழந்தை கிணற்றில் விழுந்தால் உடன் குதித்தெடுக்கும் தாயைப்போலே, இச்சேதநர் விழுந்த ஸம்ஸாரத்திலே தானுமொக்க வந்த பிறந்து இவர்கள் பட்டதையெல்லாம் தானும் பட்டு ரகூஷித்தருளுகையாலே நிருபாதிகமான மாத்ருத்வமும் வாதஸல்யமும் இச்சிறையிருப்பினால் விளங்குமென்பர். ஆச்ரிதரான தேவர்களுடைய ஸ்த்ரீகளின் சிறையை விடுவிக்கைக்காகத்தன் அநுக்ரஹத்தாலே தானே வலியச் செய்துகொண்டதாகையாலே பிராட்டிக்குச் சிறையிருப்பு ஏற்றத்திற்கு உறுப்பாமித்தனை. உலகத்தவர்கட்குக் கர்ம நிபந்தனமாக நேர்கின்ற சிறையிருப்பே ஹேயமாகும். பிள்ளை லோகசார்யரும் ஸ்ரீ வசநபூஷணத்தில் “இதிஹாஸ ச்ரேஷ்டமான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றம் சொல்லுகிறது” என்றருளிச்செய்தது இவ்வாழ்ர்ர் பாசுரத்தை அடியொற்றியேயாம்.
English Translation
The Lord of exceeding perfection bears the fragrant Tulasi crown. For the sake of the beautiful sweet-tongued Sita in confinement, he burnt the fierce demon Ravana's ocean-girdled city. If he does not desire my mind, we have nothing to lose
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்