- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பரமவிலக்ஷணனாய் மஹோபகாரகனான எம்பெருமானிருக்க அவனை விட்டு அற்பமணிசரைக் கவி பாடி என்ன பலன்? என்கிறார். ஒரு விச்சேதமில்லாதபடி யாவதாத்ய பாவியான காலமெல்லாம் நிலைநின்று அநபவிக்கும்படி செல்லக் கடவதாயுள்ள வழிபாடான கைங்கரியத்தைத் தந்தருளி நம்மை ஆட்கொள்பவன் எம்பெருமான்; இங்ஙனே கைங்கரியம் செய்கிற நித்யஸூரிகளை ஒரு நாடாகவுடையவன்; இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்தில் எத்தனையூழிகாலம் கவிபாடினாலும் ஏற்றிருக்கும்; பாடுவதற்கும் மெய்யான திருக்குணங்கள் எல்லைகடந்தவையுண்டு; பாடுகிறவர்களுக்கும் ஸகலபுருஷார்த்த ஸித்தியுண்டு; பாட்டுக்கும் மிக்க சிறப்புண்டு; இப்படியிருக்க, தகாத விஷயங்களைத் தேடித்திரிந்து மானிடம்பாடி அதோகதியையடையப் பார்க்கிறீர்களே, இதுவென்கொல் என்கிறார். வழியைத் தரும் என்பதற்கு அர்ச்சிராதிமார்க்க கதியைக் கொடுத்தருள்கின்ற என்று பொருள்கொள்வாருமுளர். வானவரீசனை நிற்க - வானவரீசனை விட்டு என்றபடி. இனி, ‘ஈசனை’ என்ற ஐகாரத்தைச் சாரியையாக வைத்து முதல் வேற்றுமைப் பொருள் கொள்ளுதலுமொன்று. “இவன் நம்மை நோக்கி ஒரு கவிபாடுவானோ” என்று எம்பெருமான் ஆசையோடிருக்க- என்று ரஸமயமான பொருள் கூறுவர் நம்பிள்ளை.
English Translation
O Poets of sweet heavenly excellence! When the Lord of the celestials, Our Lord is there to show the way for all times, you stop to sing a mortal's praise! Of what use is it?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்