- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
அடியார்களின் விரோதிகளைத் தொலைப்பதற்காகத் தன்னுடைய அஸாதாரண திவ்ய ரூபத்தோடு கூடவே வந்து திருவவதாரம் பண்ணின திருக்குணத்தை அநுஸந்தித்து ஈடுபடாதவர்கள் செய்கிற ஜபம் தபம் முதலியனவெல்லாம் உபயோகமற்றவையென்கிறார். எம்பெருமான் தன்னளவிலே ஆஸுரப்ரக்ருதிகள் எத்தனை அபசாரப்பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீறமாட்டான்; தன்னடியவர்பக்கல் அபசாரப்பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீறமாட்டான்; தன்னடியவர்கள் அபசாரப்படுமளவில் அவ்வபராதிகளைப் பங்கப்படுத்தியே தீருவன் என்பது நூற்கொள்கை. “ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச் செய்வர்” என்று ஸ்ரீவசநபூஷணத்தில் பாசுரம். அதாவது- ஸங்கல்பமாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன் தன்னை அழியமாறி இதரஸஜாதீயனாய் அவதரித்துக் கைதொடனாய் நின்றுசெய்த ஹிரண்ய ராவண கம்ஸசிசுபாலாதி நிரஸநரூபமான அதிமாநுஷக்ருக்யங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹரிஷிகள் வஸுதேவதேவகிகள் முதலான பாகவதர் திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே என்று கநஞ்சீயர் அருளிச்செய்வாராம். இவ்வர்த்தமே இப்பாட்டில் “சாதுசனத்தைத் தலியுங் கஞ்சனைச் சாதிப்பதற்கு” என்பதனால் தெரிவிக்கப்படுகிறது.
English Translation
The Lord of the Vedas left his radiant Vaikunta and came as a mortal to protect the innocent from Kamsa;s tyranny. Other than singing and dancing his praise through every street, what is there for scholars to learn, are they men?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்