- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மாயன் என் நெஞ்சின் உள்ளான்* மற்றும் எவர்க்கும் அதுவே,*
காயமும் சீவனும் தானே* காலும் எரியும் அவனே,*
சேயன் அணியன் எவர்க்கும்* சிந்தைக்கும் கோசரம் அல்லன்,*
தூயன் துயக்கன் மயக்கன்* என்னுடைத் தோளிணையானே.
காணொளி
பதவுரை
மாயன் - ஆச்சரியனான எம்பெருமான்
என் நெஞ்சில் உள்ளான்n - எனது நெஞ்சில் இருக்கின்றான்;
மற்றும் யவர்க்கும்n - வேறு யாருக்கேனும்
அஃதே - அப்படியிருப்பதுண்டோ? (இல்லை;)
காயமும் - உடம்பும்
விளக்க உரை
ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன் என் நெஞ்சிலே தங்கியிருக்கிறான்; இது என்ன சேராச்சேர்த்தி? இதனை வேறு எவரேனும் பெற்றார் உளரோ? எல்லா உடல்களும் எல்லா உயிர்களும் தானேயாவன்; காற்று நெருப்பு முதலான ஐம்பெரும்பூதங்களும் அவனேயாவன்! தன் முயற்சியால் காண இருப்பார்க்கு அண்மையில் இருப்பவன்; எத்துணைப் பெரிய ஞானமுடையார்க்கும் சிந்தையால் நினைப்பதற்கும் ஒண்ணாதவன்; யசோதை முதலானவர்கட்குப் பரம்பொருள் என்ற வாசனையும் இல்லாத தூய எளிமையினையுடையவன்; என்னோடு கலந்தவன் ஆன இறைவன் என் தோள்களில் இருக்கின்றவன் ஆனான்.
English Translation
The Lord in my bosom is the body and spirit of all, pure enhanting and deceitful; wind and fire too are him. Lord afar and Lord near, whom none can reach through, he has ascended my shoulders; who can know this wonder?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்