- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘உயர்ந்த பிறவிகளையுடையவர்களாய்த் தத்தம் தொழில்களை நன்கு அறிந்த தேவர் பலரும், முனிவர்களும் ஆகிய பொருள்களை நீ படைப்பாய் என்று ஞானம் நிறைந்த பிரமனைப் படைத்தவன்; அப்பிரமன் முதலான தேவர்களுடைய அறிவிற்கும் அப்பாற்பட்டவன்; திசைகளையுடைய பூமி முழுவதையும் தன் திருவடிகளால் அளந்தவன்; எல்லா உயிர்கட்கும் தாயைப் போன்றவன்; இப்படிப்பட்ட இவனும் ஒரு தன்மையினையுடையவனாய் இருக்கிறானே! மேன்மைக்கு எல்லை இல்லாததனைப்போன்று, நீர்மைக்கும் எல்லையின்றி இருக்குந்தன்மை என்னே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
English Translation
You created the sages and the celestials, even the four-faced Brahma, and gave him the power the make the wombs of all creation. Lord who stepped over all creation and measured the Universe, you are compassionate to all, like a mother to all beings!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்