- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இடையர்களுக்கு பசுக்களும் விடாய்தீர நீரைப் பருக வொண்ணாதபடி தாமரை பொய்கையில் நெடுநாளாய் கிடந்த காளிய நாகத்தின் கொழுப்படங்கினபடியை அநுஸந்தித்த ஆய்ச்சிகள் மகிழ வேண்டியிருக்க அது செய்யாமல் ‘இன்று முற்றும்’ என்பனென் னென்னில்; இப்படி எங்கள் பக்கல் மாத்திரம் தீம்பு செய்யத்தலைப்பட்டானே இது எங்கள் பாவமோ? இக்கஷ்டங்களை யாம் பொருத்து உயிர்தறிப்பது மிகவும் அரிது என்று வயிறெரிந்து கூறுகின்றனரெனக் கொள்க. விடம்-விஷம். ‘பைம்பொன்’ என்ற சொல் பசுமை+பொன் என பிரித்தாற்போல, பைந்தலை என்கிற இச்சொல்லும், பசுமை+தலை எனப் பிரிகின்றதென்று நினைக்கவேண்டா; பை-என்பது மெத்தெனவு, அழகு; பாம்பின் தடம் /முதலிய பல பொருட்களை குறிப்பதொரு தனி சொல் என்க. ‘இவன் இப்பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொள்ளப் போகிறானித்தனை’ என்று நடுநடுங்கி அஞ்சி கிடந்த அனுகூலர் மனமகிழ உடம்பசைந்து கூத்தாடினபடி.
English Translation
Entering a lotus lake, and grasping a venomous serpent by its tail, he jumped on to its wide hood raised high, he shook his body and danced , today we are finished,--nad stood on its head,-- O, We are finished.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்