- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கண்ணபிரான் பாண்டவதூதனாகித் துரியோதனனிடஞ்சென்று ‘அதர்மமாகப் பந்துக்களை வருத்திப் பலத்தாலே வாழவேண்டுமென்று நீ எண்ணியிருப்பது தகாது; இருவர்க்குமுள்ள பாகங்களை பிரித்துக் கொண்டு இருவரும் ஒத்து வாழுங்கள்’ என்று முதலிற் சொல்ல, அதைத் துரியோதனன் ஸம்மதியாமையால் ‘பத்தூர்களாவது கொடு’ என்ன, அவன் அதற்கும் ஸம்மதியாமையால் ‘ஒரு ஊராவது கொடு’ என்று கண்ணன் கேட்க, அவன் அதற்கும் இசையாமல் ‘நான் ஊசிகுத்துநலமும் கொடேன்; பாண்டவர்களுக்குத் தருமமுண்டு; அவற்றின் பலனாகிய ஸ்வர்க்காதி லோகங்களுமுண்டு; அவர்கள் அவற்றை அனுபவிக்கலாம்; ராஜ்யம் எங்களுடையதே’ என்று மறுத்துச் சொல்லவே, ஒரு ஊரையும் பெறாத கோபத்தினாலே யுத்தத்தைத் தொடங்குவித்து அர்ஜுநக்குத் தேர்ப்பாகனாயிருந்தவனுக்குக் கோல் கொண்டு வா. ஒன்றுதல்-பொருந்துதல். உரோடம்-ரோஷம். தேவர்+பிரான்=தேவபிரான்; "சிலவிகாரமா முயர்திணை".
English Translation
Going to Duryodhana as an excellent messenger and asking for one village for each brother, angered by not getting even that, he stepped into the battlefield and drove the chariot for Arjuna. He is the Lord of gods. O Raven! Go fetch him a grazing staff.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்