- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நிகமநப் பாசுரங்களில் “பூவளருங் கற்பகஞ்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ் தக்கோரே” “நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே” “நாமருவியிவைபாட வினையாய நண்ணாவே” என்று பயனுரைப்பதுபோல இப்பதிகத்திற்குப் பயனுரைக்கப் படவில்லை; தொண்டர் கட்கு இத்திருமொழியைப் பாடுதல் ஸ்வயம் ப்ரயோஜநமென்று காட்டப்பட்ட தாயிற்று. “தொண்டர்கள் பாட” என்று படர்க்கையாகச் சொல்ல வேண்டுமிடத்துத் ‘தொண்டரோம்’ என்று தன்மையாகச் சொல்லியிருந்தாலும் படர்க்கையில் நோக்காகக் குறையில்லை. ஈற்றடியின் உட்கருத்து யாதெனில்; ஆழ்வார் தாம் குறைதீரப் பெற்றால் தொண்டர்களெல்லாரும் தம் குறைதீரப் பெற்றதாக நினைப்பர்களாதலால் அந்த மகிழ்ச்சியினால் இத் திருமொழியை உவந்து பாடுவர்கள்; அப்படி செய்விக்க வேணுமென்று தும்பிபோல்வாரான பாகவதர்களை வேண்டுகிறபடி.
English Translation
O Dragon-fly! The victorious kaliyan, king of the bee-humming fertile groves-and-fields Vayalali has sung this garland of sweet Tamil songs for the cloud-hued Lord of Tiukkannapuram. That we devotees may sing it, grace us with the fragrance of his Tulasi wreath.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்