- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தூம்பு உடைப் பனைக் கை வேழம்* துயர் கெடுத்தருளி* மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்* கடு மழை காத்த எந்தை*
பூம் புனல் பொன்னி முற்றும்* புகுந்து பொன் வரன்ற* எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்* திருமணிக்கூடத்தானே.
காணொளி
பதவுரை
பூ புனல் பொன்னி - அழகியஜலத்தையுடைத்தான காவேரியானது
முற்றும் புகுந்து - எங்கும் பாய்ந்து
பொன் - பொற்குவியல்களை
வரண்ட - கொண்டுவந்து தள்ளப்பெற்றதும்
எங்கும் - கண்டவிடமெங்கும்
விளக்க உரை
முதலடியில், ‘பணைக்கை’ என்றும் பாடமுண்டு; பருத்த கையையுடைய என்றபடி மூன்றாமடியிலும் ‘முற்றும்’ ‘முற்றம்’ என்பன பாடபேதங்கள். வரண்ட – தள்ள; “மழைப்பேரருவி மணிவரண்டி வந்திழிய” என்ற திருமழிசைப்பிரான் பிரயோகமுங்காண்க.
English Translation
The Lord who saves the elephant in distress and lifted a mount to protect the cows against rain resides at Nangur in Tirumanik-kudam where the rivet kaveri flows into fragrant groves everywhere, and lashes out grains of gold.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்