- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
விதலைத் தலைச் சென்று - ‘விதலை’ என்று நடுக்கத்துக்குப் பெயர்; ‘நாம் கஷ்டப்பட்டுப் பறித்த பூ எம்பெருமானுடைய அர்ச்சனைக்கு உதவாமற் போகிறதோ!” என்று அஞ்சி நடுங்கியிருந்தகாலத்தில் என்கை. வடமொழியில், ‘வி’ என்னுஞ் சொல் பக்ஷி யென்னும் பொருளது; பக்ஷிகளில் தலைவனை கருடனை ‘விதலை’ என்கிறது; விதலைத்தலை- கருடன்மேலே என்னவுமாம். (விண்ணைவு மித்யாதி) நகரச்சிறப்புக் கூறப்படுகின்றது; திருநாங்கூரில் மாடமாளிகைகள் விண்ணுலகளவும் ஓங்கியிருக்கின்றன: அவற்றில் புறாக்கள் உல்லாஸமாகக் கலந்திருக்கின்றன- என்கிறது. பதலையாவது - நுனியில் ஸ்தாபிக்கப்படும் கும்பங்கள். ‘கபோதம்” என்றவடசொல் மாடப் புறாவுக்கு வாசகமாயினும், அப்புறாக்கள் தங்கி வாழுமிடமாகிய ஸ்ந்நிவேசத்தையும் தமிழில் கபோதமென்றும் கபோதையென்றும் கபோதியென்றும் வ்யவஹரிப்பதுண்டு. கட்டிடத்தின் ஓர்பகுதி. “மதவலத்தலை-பிள்ளைத் தூண்களின்தலையிலே” என்பது வியாக்கியானம் அது தான் கொடுங்கை என்னலாம்.
English Translation
Then in the yore, the Lord came to the lake, --where the terrible crocodile had the red-eyed elephant in his jaws, --then and there helped the elephant in distress and took him into service. He resides in Nangur, where the Kalasa-topped mansions with pigeonholes rise sky-high, the softly-cooing coral-branch-like red-footed pigeons descend to the lower pillars and display their courtship. Offer worship in Manimadakkoyil, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்