- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாயகனது மாலைபெறாமல் வருந்துகின்ற நாயகி மதிக்கு இரங்கி நெஞ்சொடு கூறல் இது. எல்லாவிடங்களிலுஞ் சென்று வளர்ந்து இந்தவுலகத்தை அளந்து கொண்டவனான ஸர்வேச்வரனுடைய திருத்துழாய்மாலையைப் பெறும்பொருட்டு வருத்திக் கிடக்கிற நெஞ்சமே! சந்திரன், சிறப்பில்லாத ஆம்பலினிடத்து அன்பு வைத்து அதற்கு மகிழ்ச்சி தந்து சிறந்த தாமரையை அழிக்கும் அற்பகுண முடையவனாதலால் அவன் நமது அழகிய கைவளைகளைக் கழலச் செய்தல் ஒரு வியப்பன்று என்கிறாள். இது சந்திரோபாலம்பம். தாமரைக்குத் தலைவனான ஸூர்யன் கண் மறைந்த விடத்து அத்தாமரையை வருத்துகிற இவனுக்கு, தலைவனைப் பிரிந்த எம்மை வருத்துதல் இயல்பே என்றவாறு. வடம்போதினையும் = ‘வடம்போது இனையும்’ என்று பிரிப்பதன்றி, வடம்போதில் நையும் எனவும் பிரிக்கலாம்; பொருள் ஒன்றே. மடநெஞ்சமே! = தூலபமான பொருளில் பற்றுவைத்ததோடு அப்பற்றை என்றும் விடமாட்டாமல் வீணே வருந்துகின்ற நெஞ்சமே! என்றவாறு, ‘விடம்போல் விரிதல் என்றது- விஷம் கொலைசெய்வது போல நம்மைக் கொலை செய்வதற்காகவே வந்து தோன்றல் என்றபடி; ஆகவே இவ்வுலமை- வருத்துந் தன்மை பற்றியதேயன்றி நிறம்பற்றியதன்று. வியப்பே = எ- எதிர்மறை; வியப்பன்று என்றவாறு.
English Translation
O Foolish Heart of mine, desiring the Tulasi-garland of the lord who rose and measured the Earth! While the big petals of the red lotus close. The little pearls of the white lily open up by the Moon which spreads its moonlight poison everywhere, to take our white bangles, Is this is surprising?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்