- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருந்திய செங்கண்மால் – நாம் திருந்துவதற்குப் பாங்கான திருக்கண்களை யுடையவன் என்கை. இவனே பரமபுருஷனென்று நாம் நிஸ்ஸம்சயமாக அறுதியிடலாம்படி, தன்னுடைய ஸர்வேச்வரத்வத்தைக் கோட்சொல்லித் தருகின்ற திருக்கண்கள் படைத்தவன். “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய் கண்கள்“. ‘ஆங்கே பொருந்திய‘ என்றது –எப்போதும் அடியவர்களைக் காத்தருள்வதாகிற காரியமொன்றிலேயே எம்பெருமான் பொருந்தியிருக்கின்றமையைச் சொன்னபடி. இதனையே விவரிக்கிறார் உலகமுண்டுமிழ்ந்து நீரேற்று மூவடியா லன்றுலகந் தாயோன் என்று. பிரளயம் வந்தவாறே அதில் உலகங்களெல்லாம் அழியாதபடி அவற்றைத் திருவயிற்றிலேவைத்து நோக்கியும், பிறகு வெளிப்படுத்தியும், மஹாபலி போல்வாருடைய அபிமானத்தில் நின்றும் மீட்டுத் தன்னடிக் கீழ்ப்படுத்தியும் இவை போல்வன பல காரியங்களினால் தன்னுடைய ரக்ஷகத்வத்தைப் பிரகாசப்படுத்திக் கொண்டேயிருக்கிற எம்பெருமானுடைய திருவடிகளே உபாயோபேயங்க ளென்றதாயிற்று. திருந்திய என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம். “இவ்வாத்மாக்கள் திருந்தாவிட்டால் இவற்றைத் திருத்தப் பாராதே இவற்றுக் கீழாகத் தன்னைத் திருத்திக்கொண்டிருக்கும் ஸ்ர்வேச்வரன்“ என்ற பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செயலின் அழகு காண்மின்.
English Translation
The lotus-eyed Lord is himself the medicine. its healing power and the sweet well-being as well. He made, swallowed and remade the universe, then measured it, by seeking a gift of three feet of land.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்