சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
    காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்
    திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
    உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.

    பதவுரை

    கலை - ஆண் மான் பிணை - பெண் மான் எந்தை - என் தந்தை; எனது தலைவன் மருவுதல் - மகிழ்வுடன் பொருந்தியிருத்தல்; தோன்றுதல் தெங்கு - தென்னை மரம் கிடங்கு - வெற்றிலைப் பந்தல்; பந்தல் கால்

    விளக்க உரை

    திருக்கூடலூரில், தென்னை மரங்கள் வெற்றிலைக் கிடங்கின் கரையிலே நிற்க, அவற்றின் படர்ந்த இலைகளும், தென்னங்குலைகளும் தாழ அமைந்து, வெற்றிலைக் கிடங்கை அணைத்தவாறு காட்சியளிக்கிறது. எனது தலைவனும், சுவாமியுமான திருமால், ஆண் மான்கள் பெண் மான்களோடு சேர்ந்து வாழும் திவ்யதேசமான திருநீர்மலையை தன் இருப்பிடமாகக் கொண்டு அருள் புரிவது போலவே, இயற்கை அழகு மிகுந்த திருக்கூடலூர் திவ்யதேசத்திலும் எழுந்தருளியுள்ளான்.

    English Transaction

    The Lord who resides in Thiruneermalai, where deer-pairs rest together, has come to reside in Kudalur where coconut bunches hang low on trees, over leaves of the betel creeper that surrounds it.