2 எண்ணிக்கை பாடல் பாட

கண்ணி நுண் சிறுத் தாம்பினால்*  கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன்*  என் அப்பனில்*

நண்ணித் தென் குருகூர்*  நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2) 


நாவினால் நவிற்று*  இன்பம் எய்தினேன்*
மேவினேன்*  அவன் பொன்னடி மெய்ம்மையே*

தேவு மற்று அறியேன்*  குருகூர் நம்பி*
பாவின் இன்னிசை*  பாடித் திரிவனே*


திரிதந்து ஆகிலும்*  தேவபிரான் உடைக்*
கரிய கோலத்*  திருவுருக் காண்பன் நான்*

பெரிய வண் குருகூர்*  நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய்*  அடியேன்*  பெற்ற நன்மையே*


நன்மையால் மிக்க*  நான்மறையாளர்கள்*
புன்மை ஆகக்*  கருதுவர் ஆதலில்*

அன்னையாய் அத்தனாய்*  என்னை ஆண்டிடும்
தன்மையான்*  சடகோபன் என் நம்பியே  

 


நம்பினேன்*  பிறர் நன்பொருள் தன்னையும்*
நம்பினேன்*  மடவாரையும் முன் எலாம்*
செம்பொன் மாடத்*  திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய்*  அடியேன்*  சதிர்த்தேன் இன்றே

பயனன்று ஆகிலும்*  பாங்கலர் ஆகிலும்* 
செயல் நன்றாகத்  *திருத்திப் பணிகொள்வான்,*
குயில் நின்றார் பொழில் சூழ்  *குரு கூர்நம்பி,* 
முயல்கின்றேன்  *உன்தன் மொய்கழற்கு அன்பையே.  (2) 

அன்பன் தன்னை*  அடைந்தவர்கட்கு எல்லாம் 
அன்பன்*  தென் குருகூர்*  நகர் நம்பிக்கு*
அன்பனாய்*  மதுரகவி சொன்ன சொல் 
நம்புவார் பதி*  வைகுந்தம்*  காண்மினே   (2)