2 எண்ணிக்கை பாடல் பாட

அமலன் ஆதிபிரான்*  அடியார்க்கு  என்னை ஆட்படுத்த-
விமலன்,  *விண்ணவர் கோன்  *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்- 
கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)

உவந்த உள்ளத்தனாய்*  உலகம் அளந்து அண்டம் உற,* 
நிவந்த நீள்முடியன்*  அன்று நேர்ந்த நிசாசரரைக்,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்*  கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்* 
சிவந்த ஆடையின் மேல்*  சென்றதுஆம் என சிந்தனையே (2)

மந்தி பாய்*  வட வேங்கட மாமலை,*   வானவர்கள்,- 
சந்தி செய்ய நின்றான்*  அரங்கத்து அரவின் அணையான்,* 
அந்தி போல் நிறத்து ஆடையும்*  அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்* 
உந்தி மேலதுஅன்றோ*  அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)

ஆலமா மரத்தின் இலைமேல்*  ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்*  அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி  ஆரமும்*  முத்துத் தாமமும் முடிவில்ல  தோரெழில்*
நீல மேனி ஐயோ!*  நிறை  கொண்டது என் நெஞ்சினையே! (2)

கொண்டல் வ‌ண்ணனைக்*  கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்*  என்உள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி  அரங்கன்*  என் அமுதினைக்-
கண்ட கண்கள்*  மற்றுஒன்றினைக்*  காணாவே. (2)