விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுடர்ஒளி பரந்தன சூழ்திசை எல்லாம்*  துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,* 
    படர்ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ*  பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*
    மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற*  வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,* 
    அடல்ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சூழ் திசை எல்லாம் - கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி - ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன - பரவி விட்டன;
துன்னிய - (ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை - நஷத்திரங்களினுடைய

விளக்க உரை

கண்ட இடமெங்கும் சூரிய ஒளி பரவ, நக்ஷத்ரங்களினுடையஒளியும் குளிர்ந்த சந்திரனுடையஒளியும், இருளும்நீங்கியது. விடியற் காலையில் வீழும்காற்றானது, பசுமையோடு காணப்படும் பாக்குமரங்களினுடையமடலைக் கீற, அதனாலேபாக்குமரத்தினுடைய அழகிய பாளைகள் பரிமளித்து வீசா நின்றது. தேஜசு மிக நிறைந்த திருவாழிஆழ்வானை அழகிய திருக்கையிலே உடைய அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

English Translation

Twilight spreads all over the horizon; the little stars disappear. The tender dew Moon is fading. Darkness is dispelled. Areca fronds burst spilling their golden inflorescence, blown by the wind O Lord of Arangam, pray wake up.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்