விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒருவில்லால் ஓங்கு முந்நீர்*  அடைத்து உலகங்கள் உய்ய,* 
    செருவிலே அரக்கர் கோனைச்*  செற்ற நம் சேவகனார்,*
    மருவிய பெரிய கோயில்*  மதில் திருவரங்கம் என்னா,* 
    கருவிலே திருவிலாதீர்!*  காலத்தைக் கழிக்கின்றீரே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓங்கு முந்நீர் அடைத்து - கொந்தளிக்கின்ற கடலை அணை கட்டி;
உலகங்கள் உய்ய - லோகமெல்லாம் வாழும்படி;
செருவிலே - போர்க்களத்திலே;
அரக்கர் கோனை - இராவணனை;
செற்ற - முடித்தருளின;

விளக்க உரை

இராமபிரானும் கண்ணபிரானுமாய் அவதரித்த பெருமான்றானே திருவரங்கம் பெரிய கோயிலில் கண் வளர்ந்தருளுகிறான்; ஜாயமாநகால கடாக்ஷமில்லாமையாலன்றோ நீங்கள் இழக்கிறது! என்று க்ஷேபித்துக்கூறுவது இப்பாட்டு. இராமபிரான் ஸமுத்ரராஜனை அடைக்கலம்பற்றி வழிவிட வேணுமென்று வேண்டிக்கொண்டவிடத்தும் அவன் வந்து முகங்காட்டாதொழிய, “ஒரு மீன்படுகுட்டம் நம்மை அஸமர்த்தராக நினைத்துவிட்டது; இனி ஒரு கைபார்க்குமத்தனை” என்று துணிந்து இளையபெருமாளை நோக்கி “வில்லைக்கொண்டுவா” என்று நியமித்தருளின பின்பு ஸமுத்ரராஜன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து முதுகைக்காட்டித் தன்மீது அணைகட்டிப் போகும்படி அமைந்தனனாதலால், ஒரு வில்லாலோங்கு முந்நீரடைத்து என்கிறார். ஓங்கு என்றது-கடலின் இயற்கையான கொந்தளிப்பைக் கூறுகிறபடி யன்று; இராமபிரான் சீற்றத்தாலே கையும் வில்லுமாய் நின்ற வீரவுறப்பைக் கண்டு கீழ்மண்கொண்டு மேல் மண்ணெறிந்து காலிலேவிழுமாபோலே திருவடிகளளவும் வந்து வெள்ளங் கோத்தபடியைக் கூறுவதாம்.

English Translation

With a mighty bow He parted the ocean. For the world’s relief he killed the Rakshasa chief in battle. He is our Saviour. The fortressed temple of Tiru-Arangam is the place he has chosen to live in. O ill-fortuned birth-ones! You idle your time without chanting his names.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்