விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பச்சை மாமலைபோல் மேனி*  பவளவாய் கமலச் செங்கண்*
    அச்சுதா! அமரர் ஏறே!*  ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
    இச்சுவை தவிர யான்போய்*  இந்திர லோகம் ஆளும்,*
    அச்சுவை பெறினும் வேண்டேன்*  அரங்கமா நகர் உளானே!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அச்சுதா - அச்சுதனே
அமரர்ஏறே - நித்யஸுரிகளுக்குத் தலைவனே!
ஆயர்தம் கொழுந்தே - இடையர் குலத்தில் தோன்றிய இளக்குமாரனே
தவிர - விட்டுவிடும்படி
வேண்டேன் - (அதனை) விரும்பமாட்டேன்.

 

விளக்க உரை

உரை:1

இப்படி திருநாமங் கற்ற ஆழ்வாரை நோக்கிப் பெரியபெருமாள் “ஆழ்வீர்! நம் பேர் சொன்னவர்களுக்கு நாம் கொடுப்பதொரு நாடு உண்டு; அதைத் தருகிறோம் கொள்ளும்.” என்ன; இவ்வுலகத்திலிருந்தபடியே திருநாமத்தைச் சொல்லி அதனால் பெறக்கூடிய இனிமைக்கு பரமபதத்திற் போய் அநுபவிக்கின்ற அந்த அனுபவித்தினால் தோன்றும் இனிமையும் ஈடாகாது; அது எனக்கு வேண்டா என்கிறார்.

உரை:2

பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார். மரம் தண்ணிழல் கொடுத்து காப்பதோடு நிற்பதில்லை. "ஆயர் தம் கொழுந்தே" என்கிறார் ஆழ்வார். கொழுந்து மரத்தின் உச்சியில், தளிர்க்கும் கிளையில் இருப்பது. ஆயர் குலத் தலைவனான கண்ணனை கொழுந்து என்பது சரிதான். கொழுந்து மென்மையானது, மிருதுவானது, பார்க்க அழகுள்ளது - முல்லைத் தலைவனும் அப்படி என்பதும் பொருந்துகிறது. அதற்கும் மேலே, அடி வேரில் புண் என்றால் முதலில் வாடுவது கொழுந்துதான். மெய் பொருளின் காருண்ய கிருபையைக் காட்ட இதற்கு மேல் ஒரு உதாரணம் தர முடியுமா என்று தெரிய வில்லை. அடியார்களின் துன்பம் காண்கையில் முதலில் கண்ணீர் சிந்துபவன் கண்ணன் என்று வெகு அழகாக சொல்லி வைத்தனர் பண்டைத் தமிழர். இப்பாடலையும் முன்பு நம்மாழ்வார் உவமைப் படுத்திய "தொன் மிகு பெரும் மரம்" என்பதையும் சேர்த்து ரசிக்க முடியும்!

English Translation

“O Lord of Arangama-nagar, with the hue of a huge green mountain! Lord of coral lips, lotus-red eyes, Achyuta! Lord of Eternals, O Cowherd-Lord”, -- denying the joy of praising you thus, if I were given to rule Indra’s kingdom, - even if you gave it, - I shall not want it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்