விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளைவேலை வெற்புநாட்டி*  வெள்எயிற்று அராவளாய்,* 
    அள்ளலாக் கடைந்த*  அன்று அருவரைக்கு ஓர்ஆமையாய்,*
    உள்ளநோய்கள் தீர்மருந்து*  வானவர்க்கு அளித்த,*  எம்- 
    வள்ளலாரை அன்றி*  மற்றுஒர் தெய்வம் நான் மதிப்பனே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேள் எயிறு அரர் - வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை
அளாய் - (கடைகயிறாகச்) சுற்றி
அள்ளல் ஆ - அலைகள் செறியும்படி
கடைந்தஅன்று - (கடலைக்) கடைந்தருளின காலத்தில்
அருவரைக்கு - தாங்க முடியாததான அம்மலைக்கு

விளக்க உரை

வெளுத்தகடலிலே மந்தரமலையை மத்தாகநாட்டி வெளுத்த பற்களையுடைய வாஸுகியென்னும் நாகத்தைக் கடை கயிறாக அதிலேற்றி அந்த மாகடலை “கடல்மாறு சுழன்றழைக்கின்ற வொலி” என்னும்படியே திசைகள் எதிரேவந்து செறியும்படியாகக் கடைந்தருளின காலத்து அம்மலை ஆழந்துபோகாமல் தன் முதுகிலே நின்று சுழலும்படி கூர்மரூபியாய்த் தாங்கிக் கிடந்து, தேவதைகட்கு ஏற்பட்டிருந்த துன்பங்களெல்லாம் தீரும்படியான மருந்தாகிய அம்ருதத்தை அவர்கட்கு எடுத்தருளி பரமோதானான பரமபுருஷனையன்றி வேறொரு தெய்வத்தை ஆச்ரயபணீயமாக நினைப்பனோ நான் என்கிறார்.

English Translation

I praise the Lord benevolent; -- He came as turtle in the yore to bear the burden of a rock, to churn an ocean full of milk. With Vasuki the serpent as a churning rope on Meru mount, He gave ambrosia to the gods, -- now how can I, another god?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்