விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்*  சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி*  
    வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு*  வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்*
    தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
    எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை*  இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செவ்வரி நல் கரு நெடு கண் - (உத்தம லக்ஷ்ணமான) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களை யுடைய;
சீதைக்கு ஆக - வநிதையை மணம்புரிதற் பொருட்டு;
சினம் விடையோன் - கோபத்தையுடைய ரிஷபத்தை வாஹநமாக வுடையனான சிவபிரானுடைய;
சிலை இறுத்து - வில்லை முறித்து (பின்புமிதிலா புரியினின்று மீளும் வழியில்);
மழுவாள் ஏந்தி - கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய;

விளக்க உரை

நாபன்காமடிமில் எவ்வரி என்றே நாடெங்கும் ஓதுவர். அப்பாடத்துக்கு ஏவரி என்பது எவ்வரியென்று விகாரப்பட்டதெனக்கொண்டு ஏ-அம்பு தொடுப்பதற்கு உரிய வரி - நீண்ட என்று கஷ்டப்பட்டு பொருள் கொள்ளலாமாயினும், வேறொருத்தரால் அடக்கியாள வொண்ணாதே காணவே ப்ரதிபக்ஷம் முடியும்படியான ஸ்ரீசார்ங்கம். என்ற வியாக்கியானத்திற்கு அப்பாடம் சேராது. எவ்வரு என்றோதுவதே சிறக்கும். ஏவரு என்பது எதுகை நோக்கி எவ்வரு எனக்குறுக்கலும் விரித்தலுமாகிய விகாரங்களை யடைந்தது ஏவு-ஏவுதல்,அடக்கியாளுதல்; (முதனிலைத் தொழிற்பெயர்) அரு-ஒண்ணாத; எனவே, அடக்கியாள முடியாத என்றதாயிற்று. (இறைஞ்சுவா ரிணையடியே இறைஞ்சினேனே) இராமனுக்கு அடியவனான பரதனுக்குஅடிமை பூண்டொழுகின சத்ருக்நன் போலப் பாகவத தாஸனாக வேண்டுமென அவாவுகின்றார்.

English Translation

For the love of the dark-eyed Sita, he broke the Siva-Dhanush, then victoriously took the bow from the axe-wielder and drove away the sworn enemy-of-kings Parasurama. The brave Raina with strong arms that wield a heavy bow resides in Tillainagar Tiruchitrakutam surrounded by high masonry walls that enemies fear. I worship the feet of those who worship him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்