விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி*  அவன்தவத்தை முற்றும் செற்றாய்* 
    உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும்*  ஒன்றாகக் கொள்ளாது* 
    என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டு*  வனம் புக்க எந்தாய்* 
    நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்*  ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் மெய் உரையும் - எனது ஸத்யவாக்கையும்;
மெய் ஆக கொண்டு - பொருளாகக் கருதி;
வனம் புக்க எந்தாய் - காடேறச் சென்ற எமது ஐயனே;
நெடுந்தோள் வேந்தே - பெரிய தோள்களையுடைய அரசனே;
ஏழ் பிறப்பும் - இனி அனேக ஜன்மங்கள்;

விளக்க உரை

மழு ஆளி - மழுவை (ஆயுதமாக) ஆள்பவன்; இ-கருத்தாப்பொருள் விகுதி. அன்றியே, மழு வாளி - மழுவாகிய ஆயுதத்தை யுடையவன் இ-பெயர் விகுதி. மழு வாள் - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. மழு - கோடாலி என் ஐயனே! உன் மீது நான் வைத்திருக்கும் அன்பின் தன்மையை மெய்யாக அறியாமல் என்னை வெறுந்தந்தை யென்றே நினைத்து அப்பிதாவின் வாக்கியத்தைப் பரிபாலனம் பண்ணவேண்டுமென்றும், நெடுநாளாக ஸத்யமே சொல்லிவருகிற தந்தையை நாம் தோன்றி அஸத்யவாதியாக ஆக்கவொண்ணாதென்று என் ஸத்யத்தை ஸத்யமாக்க வேணுமென்றும் நெஞ்சிலே கொண்டு வனத்திற்புகுந்த என் அருமைமகனே! என்பது மூன்றாமடியின் கருத்து. தந்தை, மகனை எந்தாய் என்றது, அன்புபற்றிய வழுவமைதி. செற்றாய் - செறு-பகுதி

English Translation

O My Master! Earlier one day; you took the bow from the axe-wielder and relieved him of his powers. Without any considerations for yourself, or for your grieving mother Kousalya, you have taken me and my promises for real, and gone into the forest. My Liege! Through seven lives, shall prefer you alone for a son.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்