விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வன் தாளின் இணை வணங்கி வளநகரம் தொழுது ஏத்த*  மன்னன் ஆவான்-
    நின்றாயை*  அரியணை மேல் இருந்தாயை*  நெடுங் கானம் படரப் போகு- 

    என்றாள் எம் இராமாவோ*  உனைப் பயந்த*  கைகேசி தன் சொற் கேட்டு* 
    நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்* நன்மகனே உன்னை நானே* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம் இராமாவோ - ஓ எமது இராமனே;
வளம் நகரம் - அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்;
வல் தாளின் இணைவணங்கி தொழுது ஏத்த - (சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்) வலிமையையுடைய (உனது) இரண்டு திருவடிகளிலும் (விழுந்து) நமஸ்கரித்து (எழுந்து) கைகூப்பி நின்று துதிக்க;
மன்னன் ஆவான் நின்றாயை - அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்;
அரி அணை மேல் இருந்தாயை - சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை;

விளக்க உரை

நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன் என்றது - கல்லைக்கடிக்க நன்றாய் சமைத்தாய் என்பது போன்ற விபரீதலக்ஷணை. இப்படி நான் உன் பக்கல் பெருந்தீங்கு செய்தவிடத்திலும் நீ சிறிதும் குணங்குறைந்தாயில்லை; உன் குணம் மேன்மேல் மிக்கு விளங்கப்பெற்றாய் நானே குணக்கேடுடையனாய் நின்றேன் என்பான் நன்மகனே என்று விளித்தான். புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க. ஈற்றடி இரக்கத்தை நன்கு விளக்கும். போகு - என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது, சிறுபான்மை உயிர்வரக் குற்றியலுகரம் கெடாது பொது விதியால் வகரவுடம்படு மெய் ஏற்று, போகுவென்றாள் என்று நின்றது. இவ்விடத்து இது செய்யுளோசை நோக்கியது. இராமாவோ - ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார். நன்னூலாரும் உன்னை நானிலத்தை ஆள்வித்தேன். இரண்டு செயப்படு பொருள் வந்த வினை என்பர் வடநூலார்.

English Translation

I had thought I would offer worship; seat you on lion throne and crown you king of the city today. Alas your mother Kaikeyi made you roam the forest instead! O My Rama! Assenting to her wishes, well did I bequeath my kingdom to you, my good son!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்