விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாமரை மேல் அயனவனைப்*  படைத்தவனே*  தயரதன்தன்- 
    மா மதலாய்*  மைதிலிதன் மணவாளா*  வண்டினங்கள்- 
    காமரங்கள் இசைபாடும்*  கணபுரத்து என் கருமணியே* 
    ஏமருவும் சிலை வலவா*  இராகவனே தாலேலோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாமரை மேல் - (திருநாபிக்) கமலத்திலே;
அயன் அவனைபடைத்தவனே - பிரமனை உண்டாக்கினவனே;
தயரதன் தன் மாமதலாய் - தசரதனுடைய மூத்த குமாரனே;
மைதிலி தன் மணவாளா - பிராட்டிக்கு வல்லபனே;
வண்டு இனங்கள் - வண்டுகளின் கூட்டங்கள்;

விளக்க உரை

“தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே!” என்று சொல்லி “தயரதன்றன் மாமதலாய்!” என்று சொன்னவிது - ஸகல விபூதிக்கும் பிதாவாகிய நீ இவ்விபூதியில் ஒரு பிபீலிகாப்ராயனான தசரதனைப் பிதாவாகக் கொண்டு ‘அவனுடைய பிள்ளை’ என்னும்படியாக பிறந்த அதிசயம் என்கொல் என வியந்தவாறாம். “ஏமருவுஞ்சிலை” = ஏ - எய்கையிலே, மருவும் - மூட்டாநின்ற, சிலை - வில் என்றும் பொருளாகலாம். ஆரேனும் பிடிக்கிலும் எய்கையிலே மூட்டும் வில் என்பது கருத்து. வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில் - என்றவாறு இக்கருத்துத் தோன்றவே பெரியாழ்வாரும் சார்ங்கமென்னும் வில் ஆண்டான் றன்னை என்றருளிச் செய்தாரென்க.

English Translation

Sleep, O wielder-of-the-terrible-bow, Raghava, Talelo! O Dark-gem-Lord of Kannapuram where bumble-bees hum songs on Panns! You are the eldest son of the illustrious Dasaratha; you created Brahma on a lotus.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்