விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்*  முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி* 
    எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே*  எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே* 
    உந்தை யாவன் என்று உரைப்ப*  நின் செங்கேழ்- விரலினும் கடைக்கண்ணினும் காட்ட 
    நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா*  நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்புஉடை - ப்ரீதியை யுடையவர்களான;
முந்தை நல் முறை மகளிர் - பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையையுடைய பெண்கள்;
தம் தம் குறங் கிடை - தங்கள் தங்கள் துடைகளிலே;
முறை முறை - க்ரமம் க்ரமமாக;
இருத்தி - வைத்துக்கொண்டு;

விளக்க உரை

- ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்ததென்றால் உறவினரெல்லாரும் வரிசை வரிசையாக வந்து குழந்தையை எடுத்துத் தம் தம் துடை மீது இட்டுக்கொண்டு, ‘என் நாயனே! என் குலவிளக்கே! என் கண்மணியே! என்றிப்படி பலவாறாகப் புகழ்ந்து கூறி என் செல்வமே! உன் தகப்பனார் யார்? காட்டு பார்ப்போம்! என்று கேட்குமளவில் குழந்தை தன் விரலாலும் தன் கடைக்கண்ணாலும் தன் தந்தையைக் காட்டுவது வழக்கம்; அவ்வாறு ஸ்ரீ க்ருஷ்ணவை கேட்கும்போது பெற்ற தகப்பனாகிய வஸுதேவனைக் காட்டவேண்டியது ப்ராப்தாமாயிருக்கவும் பிறந்தது முதலாக நந்தகோபர் மாளிகையிலேயே வளர்ந்தது பற்றி அந்த நந்நகோபரையன்றி வேறொருவரைத் தந்தையென்றறியாமையால் அவரையே தனக்கு தந்தையாக காட்டினானாக வடுக்கும் என்றெண்ணிய தேவகி அந்தோ! பரம பாக்யஸாலிநியான யசோதையைக் கைபிடித்த பாக்யத்தாலே! “இவன் என் தகப்பன்” என்று விரலாலும் கண்ணாலும் காட்டும்படியான அத்ருஷ்டத்தை நந்தகோபாலன் பெற்றான் பெரும் பாவியான என்னைக் கைபிடித்த கொடுமையாலே வஸுதேவன் இழந்தான். என்று சொல்லி வயிறெரிகிறாள்.

English Translation

Kind and well-bred ladies take you on their lap again and again, fondle you saying, “O My Master, O Lamp of our clan, more beautiful than the rain-cloud, O Lion! Show Father, where is Father?”. With your little pink fingers and side glances you show blessed Nanda. Las my hapless husband Vasudev does not enjoy that good fortune.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்