விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்*  குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்!* 
    மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி*  மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்*
    காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்*  கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே!* 
    ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோன் - வலிமையையுடைய
அரியின் - (நா) சிங்கத்தின்
உருவம்கொண்டு - வேஷங்கொண்டு
அவுணன் - ஹிரண்யாஸுரனுடைய
உடலம் - சரீரத்தில்

விளக்க உரை

உரை:1

“எங்குமுளன்” என்றுசொன்ன ப்ரஹ்லாதனுடைய சொல்லை யதார்த்தமாக்கும் பொருட்டுத் தூணில் நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி இரணியன் உடலைப் பிளந்தொழித்தவனே! பசிக் கோபத்தினால் ஏழுநாள் விடாமழை பெய்வித்த இந்திரன் பங்கமடையும்படி கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்து ஆய்ப்பாடியைக் காத்தருளினவனே! எனக்கொருகால் செங்கீரையாடியருள். மூன்றாமடியில் “கால்பொழிய” “கார்பொழிய” என்பன பாடபேதங்கள். முந்தினபாடத்தில் “காலொடு கல்பொழிய” என்று அந்வயித்து “காற்றோடு கூடிக் கல்மழையைச் சொரிய” என்றுரைக்க. நன்மேகமென்றது எஜமானன் சொற்படி நிடக்கும் நின்மையைக் கருதியென்க.

உரை:2

நரசிம்ம அவதாரத்தில், வலிமை மிகுந்த ஆண் சிங்கத்தினைப் போல் திருவவதாரம் எடுத்து, அசுரனான இரணியனின் உடலில் உள்ள இரத்தம் பொங்கி பொங்கி வெளியில் வருமளவுக்கு, உன் கூரிய நகங்களாலேயே அவன் வயிற்றைக் கிழித்தெடுத்தாய்,இரணியனின் மகனான, பிரகலாதன் கூறிய வார்த்தைகளை மெய்ப்பித்து, இரணியனிடமிருந்து பிரகலாதனைக் காப்பதற்காக நீ இந்த திருவவதாரம் புரிந்தாய்.வானுலகத்திலுள்ள தேவர்களின் தலைவனான, இந்திரன் மிகுந்த கோபங்கொண்டு பூமிக்கு மழையைத் தந்து வாழ்விப்பது, கருமேகந்தான். அதனால்தான் காள நன்மேகம் ன்னு அடைமொழியோட சொல்லியிருக்கார் ஆழ்வார். சில்லென்று மழைச்சாரல் சிந்தினால் நல்லாருக்கும்.கல்லாய் பொழிந்தால்?? இப்ப என்ன செய்வது, எங்கே சென்று ஒண்டுவது? கடவுளே! என்று கோபாலக் கண்ணனிடம் அண்டுவதே சரியென்று ஆநிரைகளொடு, ஆயர்களும், அவன்பால் தஞ்சம் புகுந்தனர். கண்ணனோ, சுடர்வெண் ஆழி சுழன்று கொண்டிருந்த விரலில், கோவர்த்தன மலையைத் தாங்கிநின்று, அனைவரையும் காப்பாற்றினான்.அன்று நரசிங்கனாய் வந்து, பிரகலாதனைக் காத்தவனே! கோவர்த்தனக் குடை கொண்டு, ஆயர்களைக் காத்த எங்கள் குலத் தலைவனே! எனக்கு ஒருமுறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக; ஆயர்கள் குலத்துதித்த, போர் செய்ய வல்லமை கொண்ட காளையைப் போன்றவனே செங்கீரை ஆடுவாயாக!

 

English Translation

Taking a fierce lion-form you tore into Hiranya’s chest with sharp claws spewing blood, to protect the true devotee, his son. When the angered Indra, king of gods, sent dark clouds that rained hailstones, you held a mountain high to protect the cows. O, Fierce bull of the cowherd clan, my Lord, dance for me just once, dance the Senkirai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்