விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி*  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த*  அரவரசப்
    பெருஞ்சோதி  அனந்தன் என்னும்*  அணிவிளங்கும் உயர்வெள்ளை ணையை மேவி*
    திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்* 
    கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு*  என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரு அரங்கம் - ஸ்ரீரங்கமென்கிற;
பெரு நகருள் - பெரிய நகரத்திலே;
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும - இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப்பெற்ற;
நெற்றி - நெற்றியையும்;
இனம் துத்தி - சிறந்த புள்ளியையும்;

விளக்க உரை

உரை:1

திருவரங்கம் பெரியகோயிலில் உபயகாவேரீ மத்யத்தில் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருளாநின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார். ஆயிரம் பைந்தலைய அனந்தனாகையால் ஒவ்வொரு தலையிலும் ஒவ்வொரு மாணிக்கமணி உண்டாகையால் மணிகள் எனப்பட்டது. ஒரு மணியின் சுடரே இருளனைத்தையும் ஒழிக்கவற்றாயிருக்க, ஆயிரம் மணிகளின் சுடரால் இருளிரியச் சொல்லவேண்டாவே. இமைத்தல்-விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல். துத்தி-படத்தின் மேலுள்ள பொறி. மேவி என்ற வினையெச்சம் பள்ளி கொள்ளும் வினையைக் கொண்டு முடியும். பொன்னி-பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னியென்று பெயராயிற்று. “பொன்னி திரைக்கையாலடிவருட” என்றது-காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள கரையிலே பரமஸூகமாகக் கண் வளர்ந்தருள்கின்றமையைக் கூறியவாறு. கோமளம்-வடசொல், கண்ணால் துகைக்கவொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.

உரை:2

மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?
என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் தாபமிருந்தால் போதும் அவன் செயல்பட தொடங்கிடுவான்.
 

English Translation

In the big city of Arangam my dark gem-hued lord reclines on Ananta, the white coiled serpent with a thousand hoods each marked with a ‘U’, -- the Lord’s feet, --and bearing radiant gems on each forehead that dispel the darkness everywhere. His tender feet are caressed by waves of the pure waters of Kaveri. O, when will my starving eyes feast on his subtle form?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்