விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாட்டைப் படை என்று அயன் முதலாத்*  தந்த நளிர் மா மலர் உந்தி* 
    வீட்டைப் பண்ணி விளையாடும்*  விமலன்தன்னைக் கண்டீரே?* 
    காட்டை நாடித் தேனுகனும்*  களிறும் புள்ளும் உடன் மடிய* 
    வேட்டையாடி வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாட்டை படை என்று - உலகங்களை ஸ்ருஷ்டி என்று
அயன் முதலா - பிரமன் முதலான பிரஜாபதிகளை
தந்த - உண்டாக்கின
நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி - குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபியாகிற வீட்டையுண்டாக்கி
விளையாடும் - இப்படியாக லீலாரஸம் அநுபவிக்கிற

விளக்க உரை

- சிறிது இடத்தைத்தானே கைதொட்டு ஸ்ருஷ்டித்து மேலுள்ளதையெல்லாம் ஸ்ருஷ்டிங்களென்று சதுர்முன் முதலான ப்ரஜாபதிகளையுண்டாக்கினவனும், அந்த நான் முகனுக்கிருப்பிமாகத் திருநாபிக் கமலத்தை புண்டாக்கித் தந்து இதுவே லீலையாக இருப்பணுமான பரமபுருஷனைக் கண்டதுண்டோ? கம்ஸன் ஏவின அஸுராவேம் பெற்ற ஐந்துக்களையெல்லாம் முடித்துக்கொண்டு வேட்டையாடிவந்த அப்பெருமானை விருந்தாவனத்திலே கண்டோம் “அயன் முதலானவர்களை“ என்றதநிணங்க “நாட்டைப்படைமின்“ என்று பன்மையாகவன்றோ இருக்கவேணும், படை என்று ஒருமையாக இருத்தல் கூடுமோ? எனின், அயன் முதலானவர்களைத் தனித்தனியே விளித்து “நீநாட்டைப்படை“ எறு விதிதத்தாகக்கொள்க. “அயன் முதலாத்தந்த“ என்பதைவிட “அயன்றன்னைத்தந்த“ என்று படமாகில்அழகாயிருக்குமென்று நம்பிள்ளை அருளிச்செய்வாராம். அயன்-பிரானை, முதலா-முதன்மையாக தந்த-, என்றும் பொருள் கொள்ள இடமுகடு. அயன் -அஜ என்ற வடசொல்விகாரம். அ-எம்பெருமான் பக்கலில், ஜா-தோன்றினவன். விமலன் -லீலாரஸந்தவிர வேறொருபலனை விரும்பாமையாகிற தூய்மையுடையவன் என்கை.

English Translation

“The Lord creates Brahma, and through him the worlds. Did you see the pure one, for whom all this is sport?” “The Lord who killed the bird, the calf and the elephant, came out of the forest after hunting; we saw him there in Brindavana”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்