விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆரே உலகத்து ஆற்றுவார்*  ஆயர் பாடி கவர்ந்து உண்ணும்* 
    காரேறு உழக்க உழக்குண்டு*  தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை* 
    ஆராவமுதம் அனையான் தன்*  அமுத வாயில் ஊறிய* 
    நீர்தான் கொணர்ந்து புலராமே*  பருக்கி இளைப்பை நீக்கீரே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயர்பாடி - திருவாய்ப்பாடி முழுவதையும்
கவர்ந்து உண்ணும் - கொள்ளைகொண்டு அநுபவிக்கிற
கார் ஏறு - ஒரு கறுத்தகாளை போன்ற கண்ணன்
உழக்க - ஹிம்ஸிக்க
உழக்குண்டு - (அதனால்) துன்பப்பட்டு

விளக்க உரை

உரை:1

இராமபிரானிடத்து ஆசைப்பட்டோமாகில் “***“ (பஹவோ! கல்யாணகுணா, புதுரஸ்ய ஸந்திதே) என்படி அவன் குணங்கடலாகையாலே அந்த்தருணங்களை நம்பியநுஸந்தாநஞ்செய்து கொண்டு ஒருவாறு தத்தத்திருங்கள் (பிராட்டி தரித்திரதார்போல்) க்ருஷ்ணலுடையதீபில் வுண்பட்டவர்கள் அப்படித்தரித்திருதாற்போ)க்ருஷண்னஐடய தீம்பீலே புண்பட்டவர்கள் அப்படித் தரித்திருக்க முடியமோ? திருவாய்ப்பாடியிலுள்ள அஞசுலக்ஷங்குடிற் பெண்களளவிலே செய்யவேண்டிய தீபுகளையெல்லாம் அவன் ஒருமடைசெய்து.“ என்னொருத்தியளவிலே செய்யாநின்றான்நான் எப்படி பிழைக்கமுடியும்? அம்புபட்ட புண்வாயை மருந்திட்டு ஆற்றலாம் அவனது தீம்புகட்கு விஷயமாகித் தளர்ந்தும் முறிந்துவிடக்கிடக்கின்ற என்னை இவ்வுலகத்தில் ஆறுவாருண்டா? என்று சொல்லிக்கொண்டே இளைத்து வீழ்த்து நெடும்போது ஷம்ஜஞையிற்க்கிடந்தாள் ஆண்டாள். அவ்வளவிலே நிதானமறிந்த, சிலர், அம்ருதத்தையிட்டு இவளுடைய மயக்கத்தைத் தீர்க்கலாமென்றெனண்ணி ஆராமுவது இத்யாதீகளான பசுவந்நாமங்களைச் செவிப்படவுரைக்க அதுகேட்டவாறே தெளிந்தெழுந்து பின்னடிகளருளிச் செய்கின்றாள். அமுதத்திலேயுண்டான ஓரமுதத்தைக் கொணர்ந்து நான் சருகாய் உலர்ந்துபோவதற்குமுன்னே என்னைப் பானம் பண்ணுவித்து என்னுடைய இளைப்பை நீக்கப்பாருங்களென்கிறாள்.

உரை:2

'உலகத்தவரில் யார் தான் என் துன்பத்தை ஆற்ற வல்லவர்? ஆயர்பாடியில் எல்லாரையும் தன் அன்பாலும் அழகாலும் கவர்ந்து உண்ணும் கரு நிறக் காளை போன்றவன் என்னை வாட்ட வாட்டமுற்று உடல் தளர்ந்தும் உறுப்புகள் முறிந்தும் கிடக்கின்றேன். உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால், தெவிட்டாத அமுதம் போன்றவனின் அமுத வாயில் ஊறிய நீர் தான் கொண்டு வந்து என் உடல் காய்ந்து போய் விடாமல் என் உடல் மேல் தெளித்தும் நான் உண்ணக் கொடுத்தும் என் இளைப்பை நீக்குங்கள்'

English Translation

A black bull called Krishna has run amuck in Ayppadi; I lie gored and mauled by him, hopelessly beyond REPAIR. Go bring the ambrosial spittle from his sweet lips, my insatiable delight, and help me lap it before it dries; that alone can save my life.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்