விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார்க்கோடற் பூக்காள்!*  கார்க்கடல் வண்ணன் என்மேல்*  உம்மைப்- 
    போர்க் கோலம் செய்து*  போர விடுத்தவன் எங்கு உற்றான்?* 
    ஆர்க்கோ இனி நாம்*  பூசல் இடுவது?*  அணி துழாய்த்- 
    தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப்*  படைக்க வல்லேன் அந்தோ!*  (2)    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் கோடல் பூங்காள்! - கறுத்த காந்தள் பூக்களே!
உம்மை - உங்களை
போர் கோலம் செய்து - யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து
எம்மேல் - என்மேலே
போர விடுத்தவன் - அனுப்பினவானான

விளக்க உரை

கோடல்பூக்கள் என்று ஒரு புஷ்பஜாதி உண்டு, அது காந்தள்பூ என்றுஞ் சொல்லப்படும். அப்புஷ்வங்கள் கார்காலத்திலே மிகுதியாக மலரும். அவை விரஹகாலத்திலே காமுகர்கட்கு மிகவும் உத்தீபகங்களாயிருக்கும்; பலகைப்பட்ட நிறங்களையுடைய அப்புஷ்பஜாதியில் கரியநிறமுள்ள பூக்களும் உண்டு. அவை எம்பெருமானுடைய திருநிறத்துக்கு ஸ்மாரகங்களாய்க்கொண்டு ஆண்டாளை விஸேஷமாக வருத்துகின்றமையால் ‘இம்மலர்களை எம்பெருமான் படைத்தது நம்மைக் கொலைசெய்வதற்காகவே போலும்‘ என்ற அறுதியிட்டு அம்மலர்களையே நோக்கி கூறுகின்றாள்; “ஓ கோடல்பூக்களே! என்னைக் கொலை செய்வதற்கென்று உங்களை அழகாகக் கோடித்து அனுப்பின மஹாநுபாவன் எங்கிருக்கிறான்?“ என வினவுகின்றாள் முன்னடிகளில். உண்மையில் அப்புஷ்பங்கள் அசேதநங்களாகையாலே மறுமொழி ஒன்றும் சொல்லாதிருக்கவே, ‘அந்தோ‘ நம்மை இந்தப்பூக்களும் லக்ஷியம்பண்ணுகின்றன வில்லையே; அந்த எம்பெருமானோ வரமாட்டேனென்கிறான், இவையோ நம்மோடு பேசுகின்றனவில்லை; உசாத்துணை ஆகக்கூடியவர்களும் யாருமில்லை, இனி நாம் ஆர்வீட்டுவாசலிலேபோய் நம் துயரை முறையிட்டு ஆறுவது!‘ என்கிறாள் மூன்றாமடியில்.

English Translation

O Dark Kodai flowers! Where is the ocean-hued Lord, who aimed you warring arrows on me? Who will hear my plaint, alas? Even my heart unbridled has teamed with him, for the favour of his Tulasi crown.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்