விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தை ஒரு திங்களும் தரை விளக்கி*  தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்* 
    ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து*  அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!* 
    உய்யவும் ஆம்கொலோ என்று சொல்லி*  உன்னையும் உம்பியையும் தொழுதேன்* 
    வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை*  வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (2)    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அனங்கதேவா - காமதேவனே!
தைஒரு திங்களும் - தைமாதம் முழுதும்
தரை விளக்கி - நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக
தண் மண்டலம் இட்டு - குளிர்ந்த (அழகிய) மண்டலாகாரத்தை இட்டு
மாசிமுன் நாள் - மாசிமாதத்தின் முதற்பக்ஷத்தில்

விளக்க உரை

உரை:1

கண்ணபிரானோட்டைக் கலவி யைக் கணிசித்துத் திருபாவையில் நோன்புநோற்ற ஆண்டாள் அவ்வளவிலும் அவன் வந்து கலக்கக்காணாமை யாலே ஆற்றாமை மிகப்பெற்று, ‘இனி நாம் வெறுமனிருந்தாலாகாது’ பிரிந்தாரைச் சேர்ப்பிக்கவல்லவன் மன்மதனென்று கேளாநின்றோம்; அவனது காலில் விழுந்தாவது கண்ணபிரானோடு கூடப்பெறுவோம்’ எனக்கருதி, அங்ஙனமே அந்த மன்மதனைத் தன் காரியஞ்செய்யும்படிக்கு ஈடாக ஆராதிக்க நினைத்து, அவன் வரவேண்டிய இடங்களையும் தெருக்களையும் பரிஷ்கரித்து அழகிய சிறு மணல்களால் அலங்கரித்து அழகுபெறுவித்து (மண்டல பூஜைக்காக) மண்டலாகாரமான மேடையிட்டு அவனையும் அவன் தம்பியையும் வணங்குவதாகக் கூறும் பாசுரம், இது. “உய்யவுமாங்கொலோ!” என்று ஐயப்படுவதற்குக் காரணம் யாதெனில், ஸ்வரூபநாசத்தை விளைவிக்கவல்ல தேவதையைப் பற்றினமையால் இப்பற்று உஜ்ஜீவநஹேதுவாமோ? அன்றி, கீழ்விழுகைக்கு ஹேதுவாமோ? என்று நெஞ்சு தளும்புகிறபடி, திங்கள் - சந்திரன்: அமாவசைக்கு அமாவசை ஒருமாதமெனக் கொண்டு சந்திர சம்பந்தத்தாற் காலத்தை வரையறுக்கும் சாந்திரமானரீதிபற்றி, ‘திங்கள்’ என்று மாதத்திற்குப் பெயர்; வழங்கலாயிற்று: மதி என்பதும் இது; இலக்கணை.

உரை:2

தைமாதம் முழுதும் நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக குளிர்ந்த மண்டலாகாரத்தை இட்டு மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில் அழகிய சிறிய மணல்களினால் நீ எழுந்தருளும் வீதிகளை அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து உன்னையும் உன் தம்பியான சாமனையும் தொழுதேன். உக்கிரமானதும் நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான ஒப்பற்ற திரு வழியாழ்வானை திருக்கையில் அணிந்துள்ள திருவேங்கட முடையானுக்கு என்னை கைங்கரியம்பண்ணும்படி கல்பிக்கவேணும்.

English Translation

In the months of early spring, seeking the elevation of spirit, I sweep the Earth, deck the street, and spread the beautiful Mandela. O Bodiless god of love, I worship you and your brother Syama. Direct me to the Lord of the radiant discus, Lord of Venkatam hills

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்