விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்*  தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்* 
    மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்*  மாமீர் அவளை எழுப்பீரோ*  உன் மகள் தான்-
    ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ*  ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ* 
    மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று*  நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோதுகலம் உடைய பாவாய் - கிருஷ்ணனாலே மிகவும் விரும்பத்தக்க பதுமை போன்றவளே!
கீழ் வானம் - கீழ்திசைப்பக்கத்து  ஆகாசமானது
வெள்ளென்று - வெறுத்தது;
போகாமல் காத்து - போக ஒட்டாமல் தடுத்து
உன்னை கூவுவான் - உன்னை அழைத்தர் பொருட்டு
 

 

விளக்க உரை

உரை:1

எல்லோரும் திரண்டுவந்து அழைக்கவேண்டும்படி கண்ணபிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருப்பா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது. பாவாய்! கீழ்வானம் வெள்ளென்றதே; இனியாகிலும் எழுந்திராய் என்றழைக்க; இதனைக்கேட்ட அவள், அதற்குள் இராக்காலம் கழிகையாவதென்? கீழ் வானம் வெளுக்கையாவதென்? இஃது உங்களுடைய விரிந்த ஞானம்; அஞ்சுடாவெய்யோனணி நெடுந்தேர் தோன்றாதால் என்று திங்கள் திருமுகத்துச் சேயிழை யாரான நீங்கள் நெடும்போதாகக் கீழ்த்திசையை நோக்கிகக்கொண்டிருக்கையாலே உங்களுடைய முகநிலா கீழ்த்திசையிற் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து பிரதிபிம்பித்துத் தோன்றுகையாலே கிழக்கு வெறுத்தது போலத் தோற்றுகிறது; இஃது உங்களுடைய அந்யதாஜ்ஞானம்; வேறு அடையாளமுண்டாகிற் சொல்லுங்கள் என்ன; எருமைகள் பனிப்புல் மேய்கைக்காகச் சென் பரந்தமை ஏற்ற அடையாளமன்றோ? என்கிறார்கள். சிலர், எருமை சிறை வீடு எனப் பாடங்கொண்டு, எருமைகள் சிளையீனின்றும் (தொழுவத்தினின்றும்) விடுக்கப்பட்டு என்றுரைத்தனர் அது பொருத்தமற்றதெனமறுக்க. சிறுவீடு மேய்கையாவது ஊர்ப்பசுக்களுடனே சென்று வெளி வயல்களில் மேய்வதற்கு முன்னே அவரவர்கள் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் மேய்கை. நன்றாகப் பால் தருவதற்காக இப்படி சிறு வீடு மேய விடுதல் ஆயர் வழக்கம்.

உரை:2

தூய்மையான மாணிக்கங்களால் ஒளி வீசும் மாடங்களில் எல்லாம் விளக்குகள் எரிய, நறுமண தூபங்கள் கமழத், தூங்குவதற்காகவே இருப்பது போன்ற படுக்கையின் மேல் கண்களை மூடிக் கொண்டிருக்கும் மாமன் மகளே! மாணிக்கங்களால் அழகு பெற்றிருக்கும் கதவுகளின் தாளைத் திறப்பாய்!
மாமீ! அவளை எழுப்ப மாட்டீர்களா? உங்கள் மகள் தான் ஊமையா? இல்லை செவிடா? மயக்கம் அடைந்துவிட்டாளோ? படுக்கையை விட்டு எழ முடியாதபடி நீண்ட உறக்கம் கொள்ளும் படி யாராவது மந்திரம் போட்டுவிட்டார்களா?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று என்று இறைவனின் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்வோம்! அவளை எழுப்புங்கள்!

English Translation

The Eastern horizon whitens, water buffaloes wander out to graze the dew tipped morning grass. The other girls were keen to go; we made them wait, and came to call you. Dainty girl, wake up and join our chorus. The Lord of Gods ripped the horse’s jaws and killed the wrestlers. If we go and approach him with our prayers, he will listen in attention, and bestow his grace.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்