விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எருத்துக் கொடியுடையானும்*  பிரமனும் இந்திரனும்*  மற்றும்- 
    ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு*  மருந்து அறிவாருமில்லை*
    மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்- 
    திருத்தி*  உன்கோயில் கடைப்புகப்பெய்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எருது கொடி உடையானும் - வ்ருஷபத்வஜனான ருத்திரனும்
பிரமனம் - (அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும்
இந்திரனும் - தேவேந்திரனும்
மற்றும் ஒருத்தரும் - மற்றுள்ள எந்தத் தேவரும்
இ பிறவி என்னும் நோய்க்கு - இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “உன்னைவாழத் தலைப்பெய்திட்டேன்” என்ற ஆழ்வார் களித்துக் கூறியதைக்கேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! உமக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தம் ஸிக்ருததுஷ்க்ருதங்கள் மாறி மாறி நடக்கும்; இப்படியே ஸம்ஸாரஸாகரத்தில் மூழ்கிக்கிடப்பதற்கு என்னிடத்துக் கைம்முதலுண்டு; அடிக்கடி உனக்குச் சிரமங்கொடாமல் ருத்ராதிதேவர்களை அடுத்து இப்பிறவிநோயைக் கழித்துக்கொள்வோமென்ற பார்த்தால் உன்னையொழிய வேறொருவர்க்கும் பிறவிநோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை; அதனை அறியுமவன் நீயேயாகையால், அந்நோயை நீக்கி என்னை உன் கோயில் வாசலைக் காக்கவல்ல அடியவனாக அமைத்தருளவேணும்” என்று பிரார்த்திக்கிற படியாய்ச் செல்லுகிறது, இப்பாசுரம். “உன் கடைத்தலையிருந்து வாழுஞ் சோம்பர்” என்றவிடத்திற்கு உதாஹரணமாகக் காட்டப்பட்ட திருக்கண்ணமங்கையாண்டான் நிலைமையை அடியேனுக்கு அருள்செய்யவேணும் என்கிறார். “திருக்கண்ணமங்கையாண்டான், ஒரு ஸம்ஸாரி தன் வாசலைப்பற்றிக் கிடந்ததொரு நாயை நலிந்தவனை வெட்டித் தானங் குத்திக்கொண்டபடியைக் கண்டு, ஒரு தேஹாத்மாபிமாநியின் அளவு இதுவானால், பரமசேதநனான ஈச்வரன் நம்மை மயாதிகள் கையில் காட்டிக்கொடானென்று திருவாசலைப்பற்றிக் கிடந்தாரிறே” என்ற திருமாலை வியாக்கியானம் காண்க. பெய்- முன்னிலையொருமை வினைமுற்று.

English Translation

My feet do not steady, my tears do not stop welling, my body trembles weakly, my voice does not rise, my hairs stand on their ends, my shoulders droop, my heart surges with expectation, as I come to you for a new life. O Lord of Tirumalirumsolai surrounded by big lakes of fish dancing waters, O My Master.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்